கோவையில் காய்கறி விலை திடீர் சரிவு - காரணம் தெரியுமா?!

கோவையில் காய்கறிகளின் விலை அதிரடியாகக் குறைந்திருப்பது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சபரிமலை சீசன் மற்றும் பொங்கல் பண்டிகைகள் முடிவடைந்ததே இந்த விலை சரிவுக்குக் காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: சபரிமலை சீசன் மற்றும் பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு கோவையில் காய்கறிகளின் விலை கடந்த சில வாரங்களாக ஏறுமுகத்தில் இருந்துவந்தது. குறிப்பாக தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் விளைச்சலாகும் காய்கறிகள், பூலுவபட்டி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.



கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.150 க்கு விற்பனையான மொச்சை, இன்று ரூ.20க்கு விற்பனையாகிறது, ரூ.50 ரூபாய்க்கு விற்பனையான மற்ற பயறு வகைகள் ரூ,20 ரூபாய்க்கும், ரூ.80 முதல் 90 க்கு விற்பனையான கத்தரிக்காய் தற்போது கிலோ ஒன்று 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

தக்காளி விலை ஏற்ற இறக்கமின்றி டிப்பருக்கு 500 ரூபாய் என்ற அளவில் இருந்துவருகிறது. தற்போது, பனிக்காலம் என்பதால் வெண்டை வரத்து குறைவாக இருப்பதால் அதன் விலை இன்னும் ஏறுமுகத்திலேயே இருந்துவருகிறது. மற்ற காய்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது.



வரக்கூடிய இரண்டு மாதங்களுக்கு சாகுபடி அதிகமாக இருக்கும் என்பதால், காய்கறிகளின் விலை இன்னும் குறையவே வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மொத்த சந்தையில் குறைவான விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதால் சில்லறை விற்பனையிலும் அதன் விலை கடுமையாக சரிந்துள்ளது. இருப்பினும், காய்கறிகளின் விலை சரிவு கோவை வாழ் இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...