இந்து மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டு வரும் திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு சிவசேனா கட்சியினர் தபால் அனுப்பி வைப்பு.
திருப்பூர்: திமுக அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரி சிவசேனா கட்சியினர் ஜனாதிபதி உள்ளிட்டோருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.
திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தபால் நிலையத்திலிருந்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் திருமுருக தினேஷ் தலைமையில் சிவசேனா கட்சியினர் ஜனாதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோருக்குத் தபால் ஒன்றை அனுப்பினர்.

அந்த தபாலில், இந்து மக்கள் புனிதமாகக் கருதும் ராமர் பாலத்தை இடித்து சேது சமுத்திர திட்டத்தை அமைக்க திமுக அரசு முயன்று வருவதாகவும் அத்தகைய இந்து விரோத சேது சமுத்திர திட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும், தமிழக சட்டசபையில், ராமர் பாலத்தை ஆடம்ஸ் பாலம் என முதலமைச்சர் தெரிவித்ததாகவும்,

அந்த வார்த்தை இந்து மக்களைக் காயப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் ஆடம்ஸ் பாலம் என்ற வார்த்தையை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் மற்றும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் இலங்கையிலிருந்து பல்வேறு நாட்டினர் இந்தியாவில் ஊடுருவ வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும்.
ஏழை,எளிய மக்களுக்குப் பயனின்றி பெருமுதலாளிகளுக்கு மட்டுமே இத்திட்டம் லாபம் அளிக்கும் என்பதாலும், சேது சமுத்திர திட்டத்தைக் கைவிட வேண்டும் மற்றும் இந்து விரோத போக்கை கடைப்பிடித்துச் செயல்பட்டு வரும் திமுக அரசை ஜனாதிபதி டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தபால் நிலையத்திலிருந்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் திருமுருக தினேஷ் தலைமையில் சிவசேனா கட்சியினர் ஜனாதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோருக்குத் தபால் ஒன்றை அனுப்பினர்.
அந்த தபாலில், இந்து மக்கள் புனிதமாகக் கருதும் ராமர் பாலத்தை இடித்து சேது சமுத்திர திட்டத்தை அமைக்க திமுக அரசு முயன்று வருவதாகவும் அத்தகைய இந்து விரோத சேது சமுத்திர திட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும், தமிழக சட்டசபையில், ராமர் பாலத்தை ஆடம்ஸ் பாலம் என முதலமைச்சர் தெரிவித்ததாகவும்,
அந்த வார்த்தை இந்து மக்களைக் காயப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் ஆடம்ஸ் பாலம் என்ற வார்த்தையை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் மற்றும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் இலங்கையிலிருந்து பல்வேறு நாட்டினர் இந்தியாவில் ஊடுருவ வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும்.
ஏழை,எளிய மக்களுக்குப் பயனின்றி பெருமுதலாளிகளுக்கு மட்டுமே இத்திட்டம் லாபம் அளிக்கும் என்பதாலும், சேது சமுத்திர திட்டத்தைக் கைவிட வேண்டும் மற்றும் இந்து விரோத போக்கை கடைப்பிடித்துச் செயல்பட்டு வரும் திமுக அரசை ஜனாதிபதி டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.