திமுக அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரி சிவசேனா கட்சியினர் ஜனாதிபதிக்குக் கடிதம்

இந்து மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டு வரும் திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு சிவசேனா கட்சியினர் தபால் அனுப்பி வைப்பு.


திருப்பூர்: திமுக அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரி சிவசேனா கட்சியினர் ஜனாதிபதி உள்ளிட்டோருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தபால் நிலையத்திலிருந்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் திருமுருக தினேஷ் தலைமையில் சிவசேனா கட்சியினர் ஜனாதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோருக்குத் தபால் ஒன்றை அனுப்பினர்.



அந்த தபாலில், இந்து மக்கள் புனிதமாகக் கருதும் ராமர் பாலத்தை இடித்து சேது சமுத்திர திட்டத்தை அமைக்க திமுக அரசு முயன்று வருவதாகவும் அத்தகைய இந்து விரோத சேது சமுத்திர திட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும், தமிழக சட்டசபையில், ராமர் பாலத்தை ஆடம்ஸ் பாலம் என முதலமைச்சர் தெரிவித்ததாகவும்,



அந்த வார்த்தை இந்து மக்களைக் காயப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் ஆடம்ஸ் பாலம் என்ற வார்த்தையை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் மற்றும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் இலங்கையிலிருந்து பல்வேறு நாட்டினர் இந்தியாவில் ஊடுருவ வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும்.

ஏழை,எளிய மக்களுக்குப் பயனின்றி பெருமுதலாளிகளுக்கு மட்டுமே இத்திட்டம் லாபம் அளிக்கும் என்பதாலும், சேது சமுத்திர திட்டத்தைக் கைவிட வேண்டும் மற்றும் இந்து விரோத போக்கை கடைப்பிடித்துச் செயல்பட்டு வரும் திமுக அரசை ஜனாதிபதி டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...