உடுமலையில் இரும்புக் கம்பிகள் திருடிய ஒப்பந்ததாரர் - போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தேசிய நெடுஞ்சாலை பணி நடந்து வரும் இடத்தில் வைக்கப்பட்ட இரும்பு கம்பிகளை திருடிய ஒப்பந்ததாரரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பாலப்பம்பட்டியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிகாலையில், தேசிய நெடுஞ்சாலை அமைத்து வரும் இடத்தில் இரும்பு கம்பிகளை ஒப்பந்ததாரர் திருடியுள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், அவரை கையும் களவுமாகப் பிடித்து வைத்துக் கொண்டு உடுமலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை காவல்துறையினர், பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த ஒப்பந்ததாரரான திண்டுக்கல் மாவட்டம் பேகம்புத்தூர் பகுதியை சேர்ந்த காஜா மொய்தீன் (வயது37) என்பவரை கைது செய்தனர். அவர் மீது ஐ.பி.சி.379 பிரிவின்கீழ் திருட்டு வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தேசிய நெடுஞ்சாலை அமைக்கப் பயன்படுத்தப்படவிருந்த இரும்பு கம்புகளை ஏற்றிச் சென்ற வாகனத்தையும் காவல்துறையினர் மடக்கிப்பிடித்து, கம்பிகளை பறிமுதல் செய்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...

100 சதவீத வாக்குப்பதிவுக்காக கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி

கோவையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொண...

கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்ற பெயரில் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் குணசேகரன் (70) லக்னோ தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்று கூற...

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி: தவெக வேட்பாளர் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கனிமொழி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகள், பெட்ரோல் பங்குகளுக்...