'மருத்துவ காப்பீடு திட்டத்தில் பிரதமர் மோடி படம் இருக்க வேண்டும்' - திருப்பூர் பாஜகவினர் கோரிக்கை

மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்படுத்தும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பிரதமர் மோடியின் புகைப்படமும் இடம்பெற வேண்டும் எனக் பாஜகவினர் கோரிக்கை.



திருப்பூர்: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், மாநில அரசுத் திட்டமா? மத்திய அரசுத் திட்டமா? என்று திருப்பூர் பாஜக விவசாய அணியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணி திட்டப்பொருப்பாளர் அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது:



தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் குறித்து மருத்துவமனைகளில் விழிப்புணர்வு தகவல் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழக அரசின் இந்நாள் முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் விளம்பரத்தில் PMJAY எனக் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு விரிவாக்கம் பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத போஜனா என்பதாகும். இத்திட்டம் மத்திய அரசின் திட்டம் என்பதால் இதன் மூலம் பனை, தென்னை தொழிலாளர்கள் பயனடைவார்கள்.

இத்திட்டத்தின் மூலமாக சுமார் 1300-க்கும் மேற்பட்ட நோய்களுக்குச் சிகிச்சை பெறலாம். மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஆண்டொன்றிற்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவச் சிகிச்சை பெற முடியும்.

மத்திய அரசின் திட்டத்தைத் தமிழக அரசு விளம்பரப்படுத்தும் போது பிரதமரின் புகைப்படத்தையும் இடம் பெற வேண்டும். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மாநில அரசுத் திட்டமா? அல்லது மத்திய அரசுத் திட்டமா என விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்குப் பதில் மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்படுத்தும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பிரதமர் மோடியின் புகைப்படமும் இடம்பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...