'மருத்துவ காப்பீடு திட்டத்தில் பிரதமர் மோடி படம் இருக்க வேண்டும்' - திருப்பூர் பாஜகவினர் கோரிக்கை

மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்படுத்தும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பிரதமர் மோடியின் புகைப்படமும் இடம்பெற வேண்டும் எனக் பாஜகவினர் கோரிக்கை.



திருப்பூர்: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், மாநில அரசுத் திட்டமா? மத்திய அரசுத் திட்டமா? என்று திருப்பூர் பாஜக விவசாய அணியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணி திட்டப்பொருப்பாளர் அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது:



தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் குறித்து மருத்துவமனைகளில் விழிப்புணர்வு தகவல் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழக அரசின் இந்நாள் முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் விளம்பரத்தில் PMJAY எனக் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு விரிவாக்கம் பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத போஜனா என்பதாகும். இத்திட்டம் மத்திய அரசின் திட்டம் என்பதால் இதன் மூலம் பனை, தென்னை தொழிலாளர்கள் பயனடைவார்கள்.

இத்திட்டத்தின் மூலமாக சுமார் 1300-க்கும் மேற்பட்ட நோய்களுக்குச் சிகிச்சை பெறலாம். மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஆண்டொன்றிற்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவச் சிகிச்சை பெற முடியும்.

மத்திய அரசின் திட்டத்தைத் தமிழக அரசு விளம்பரப்படுத்தும் போது பிரதமரின் புகைப்படத்தையும் இடம் பெற வேண்டும். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மாநில அரசுத் திட்டமா? அல்லது மத்திய அரசுத் திட்டமா என விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்குப் பதில் மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்படுத்தும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பிரதமர் மோடியின் புகைப்படமும் இடம்பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...