கோவையில் இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் பறிப்பு!

கோவை போத்தனூர் ரயில் நிலையம் அருகே இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2,000 பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் அபிமணி (37). இவர் கோவை சிட்கோ பகுதியில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்றிரவு போத்தனூர் ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் அபிமணி நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த 2 இளைஞர்கள், அவரை மறித்து அவசரமாக ஒரு போன் செய்ய வேண்டும் என செல்போனை கேட்டுள்ளனர்.

அதை உண்மை என நம்பிய அபிமணி இளைஞர்களிடம் தனது செல்போனை கொடுத்துள்ளார். செல்போனை பெற்று கொண்ட அந்த இளைஞர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அபிமணி தன்னிடம் பணம் இல்லை என்று கூறி தப்ப முயன்றுள்ளார். அப்போது அவரை மடக்கி பிடித்த அந்த இளைஞர்கள் அபிமணி சட்டை பையில் இருந்த ரூ.2,000 பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக அபிமணி போத்தனூர் காவல் நிலையத்தில், புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை வைத்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...