கோவையில் பொங்கல் பண்டிகையில் 3 நாட்களும் கூடுதலாக சேர்ந்த 1,100 டன் குப்பைகள் உடனடியாக அகற்றம்..!

கோவையில் பொங்கல் பண்டிகையான 3 நாட்களில் ஒவ்வொரு நாளும் கூடுதலாக 1,100 டன் குப்பைகள் சேர்ந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு குப்பைகளை உடனடியாக அகற்றியுள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் தினமும் 1000 முதல் 1,200 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மட்டும் வழக்கத்தை விட கூடுதலாக குப்பைகள் சேரும் என்பது வாடிக்கை தான்.



ஆனாலும், இந்தாண்டு பொங்கல் பண்டிகை கொண்டாடத்தை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களிலும் தலா 1,100 டன் குப்பைகள் சேர்ந்துள்ளது.



இதனிடையே முன்னெச்சரிக்கையாக கடந்த சனிக்கிழமையில் இருந்தே மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தங்கள் பணிகளை வேகப்படுத்தியதால் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.

ஒவ்வொது நாளும் கூடுதலாக 1,100 டன் குப்பைகள் சேர்ந்தாலும் வழக்கமான பணியாளர்களை கொண்டே இந்த குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒரு சில இடங்களில் குப்பைகள் தேங்கியே உள்ளது, அதனையும் இன்று மாலைக்குள் முழுமையாக அகற்றப்படும் என மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



மண்டல வாரியாக தூய்மை பணியாளர்கள் சிறு சிறு வண்டிகள் மூலம் கூடுதலாக போடப்பட்ட குப்பைகளை சேகரித்தும், வீடு வீடாகவும் குப்பைகள் சேகரித்தும் அனைத்து லாரிகள் மூலம் இரவு பகலாக வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு திடக்கழிவு மேலாண்மை செய்யும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகை நாட்களில் கூட துரிதமாக செயல்பட்டு மாநகரில் தூய்மை பணிகளை சிறப்பாக செய்த ஊழியர்களுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...