கோவை அருகே தனியார் பேருந்துகள் மோதி விபத்து - பெண் பலி

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சென்றான்பாளையம் பிரிவில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டு முந்தமுயன்றபோது ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் படுகாயம் அடைந்தார்.


கோவை: கிணத்துக்கடவு அருகே கோதவாடியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவருடைய மனைவி அங்காத்தாள். இந்தத் தம்பதிக்கு முனியப்பன் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட மகன் உள்ளார்.

இந்த நிலையில், தனது மகன் முனியப்பனுடன், அங்கத்தாள் பொள்ளாச்சி - கோவை சாலை உள்ள சென்றான்பாளையம் பிரிவு அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது கோவையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி போட்டி போட்டுக்கொண்டு வந்த தனியார் பேருந்துகள் அங்கத்தாள் மற்றும் அவரது மகன் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் சம்பவ இடத்திலேயே அங்காத்தாள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மகன் முனியப்பனை மீட்ட அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு போலீசார், அங்காத்தாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்களான சந்தோஷ் குமார், செந்தில்குமார் ஆகியோர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...