பொங்கல் தொடர் விடுமுறை எதிரொலி - கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

பொங்கல் விடுமுறை தினத்தையொட்டி கோவை குற்றாலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் குவிந்ததால் அப்பகுதியே களைகட்டியது.



கோவை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14ம் தேதி மகாசங்கராந்தியும், ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகையும், 16ம் தேதி மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்பட்டது.

இதையடுத்து, ஜனவரி 17ம் தேதியான இன்று காணும் பொங்கல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. கடற்கரை, பூங்காக்கள், அருவிகள் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களில் மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சென்று மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்வதே காணும் பொங்கல் தினச் சிறப்பு.



அந்த வகையில், காணும் பொங்கல் தினத்தையொட்டி கோவையில் உள்ள மிக முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கோவை குற்றாலத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.



குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயதினரும் உறவினர்கள், நண்பர்களுடன் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.



பின்னர், தாங்கள் கொண்டுவந்திருந்த இனிப்புகள், உணவுப் பண்டங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு காணும் பொங்கல் தினத்தை உற்சாகமாக் கொண்டாடினர்.



பொங்கல் விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் ஒரே நேரத்தில் கோவைக் குற்றாலத்தில் குவிந்ததால் நுழைவுச் சீட்டு பெறுவதற்கு பல மணி நேரம் நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.



மக்கள் கூட்டத்தையொட்டி, கோவை குற்றாலம் பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...