கோவை சரவணம்பட்டி அருகே ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த முதியவர் - போலீசார் விசாரணை

சரவணம்பட்டி அருகே முதியவர் ஒருவர் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் காந்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் முத்துவேல் (65). இவர் நேற்றைய தினம் சரவணம்பட்டி அருகே உள்ள பாரதிநகர் பகுதியில் மயக்கமடைந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதியவரை பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் முதியவரின் உடலில் சில இரத்தக் காயங்களும் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், முதியவரின் உடலைக் கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து முதியவரின் மர்ம மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...