கோவை இடிகரை பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா - ஒயிலாட்டத்தை கண்டு ரசித்த பக்தர்கள்!

இடிகரை பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல பூஜையின் 47 வது நாளையொட்டி நடைபெற்ற தமிழரின் பாரம்பரிய ஒயிலாட்டம் நிகழ்ச்சி பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.


கோவை: கோவை மாவட்டம் இடிகரை பகுதியில் புகழ்பெற்ற பட்டி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

இந்நிலையில், இந்த கோவிலில் மண்டல பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.



இதனிடையே மண்டல பூஜையின் 47ஆம் நாளையொட்டி கோவை கருமத்தம்பட்டி சங்கமம் குழுவினரின் தமிழரின் பாரம்பரிய ஒயிலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த மண்டல பூஜையின் 48 வது நிறைவு நாளன்று கணபதி ஹோமம், சங்காபிஷேகம் மற்றும் கலச பூஜையோடு மண்டல பூஜை நிறைவு பெற உள்ளது.



இதனிடையே நடைபெற்ற ஒயிலாட்ட நிகழ்ச்சியை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நுற்றுக்கணக்கான வருகை தந்தனர்.



இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இடிகரை இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...