கோவை அருகே வெள்ளபதி மலைவாழ் கிராமத்தில் பொங்கல் கொண்டாட்டம்

கோவை மாவட்டம், சிறுவாணி அடிவாரத்தில் உள்ள வெள்ளபதி மலைவாழ் கிராமத்தில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாட்டம்.


கோவை: கோவை மாவட்டம், சிறுவாணி அடிவாரத்தில் உள்ள வெள்ளபதி மலைவாழ் கிராமங்களில் மாட்டுப் பொங்கல் முன்னிட்டு பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து இயற்கைக்கு வணக்கம் செலுத்தினர்.



கோவை மாவட்டம் சிறுவாணி அடிவாரத்தில் உள்ள வெள்ளபதி மலைவாழ் கிராமத்தில் நேர்டு தொண்டு அமைப்புடன் இணைந்து அப்பகுதி மக்கள் பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.



வெள்ளப்பதி கிராமத்தில் உள்ள பொதுஇடத்தில் வண்ண கோலமிட்டு புகையில்லா அடுப்புடன் பொங்கல் பொங்கிக் கொண்டாடினர். கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு கட்டுப்பாடுகளின்றி ஊர் பொதுமக்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் இணைந்து மாட்டுப் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

மக்கள் வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் என இயற்கை அன்னையிடம் வேண்டிக் கொண்டனர். அப்பகுதி மக்களுக்குப் பேராசிரியர் கனகராஜ், மருதாச்சல அடிகளார் பொங்கல் பரிசுகளை வழங்கினர்.



இதேபோல் சீங்கப்பதி கிராமத்திலும் பொங்கல் களைகட்டியது. பாரம்பரிய ஆடல், பாடலுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அரங்கேறின. ஊர் நடுவே அமைக்கப்பட்ட கரும்பு பந்தலில் பொங்கல் பொங்கி, அறுவடை நன்றாக அமைந்த இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவித்து, மகிழ்ச்சி பொங்கப் பொங்கல் பண்டிகையினை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...