கோவை அருகே வெள்ளபதி மலைவாழ் கிராமத்தில் பொங்கல் கொண்டாட்டம்

கோவை மாவட்டம், சிறுவாணி அடிவாரத்தில் உள்ள வெள்ளபதி மலைவாழ் கிராமத்தில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாட்டம்.


கோவை: கோவை மாவட்டம், சிறுவாணி அடிவாரத்தில் உள்ள வெள்ளபதி மலைவாழ் கிராமங்களில் மாட்டுப் பொங்கல் முன்னிட்டு பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து இயற்கைக்கு வணக்கம் செலுத்தினர்.



கோவை மாவட்டம் சிறுவாணி அடிவாரத்தில் உள்ள வெள்ளபதி மலைவாழ் கிராமத்தில் நேர்டு தொண்டு அமைப்புடன் இணைந்து அப்பகுதி மக்கள் பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.



வெள்ளப்பதி கிராமத்தில் உள்ள பொதுஇடத்தில் வண்ண கோலமிட்டு புகையில்லா அடுப்புடன் பொங்கல் பொங்கிக் கொண்டாடினர். கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு கட்டுப்பாடுகளின்றி ஊர் பொதுமக்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் இணைந்து மாட்டுப் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

மக்கள் வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் என இயற்கை அன்னையிடம் வேண்டிக் கொண்டனர். அப்பகுதி மக்களுக்குப் பேராசிரியர் கனகராஜ், மருதாச்சல அடிகளார் பொங்கல் பரிசுகளை வழங்கினர்.



இதேபோல் சீங்கப்பதி கிராமத்திலும் பொங்கல் களைகட்டியது. பாரம்பரிய ஆடல், பாடலுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அரங்கேறின. ஊர் நடுவே அமைக்கப்பட்ட கரும்பு பந்தலில் பொங்கல் பொங்கி, அறுவடை நன்றாக அமைந்த இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவித்து, மகிழ்ச்சி பொங்கப் பொங்கல் பண்டிகையினை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...