அரசின் தடையை மீறி கோவையில் இறைச்சி விற்பனை - 20 கிலோ இறைச்சி பறிமுதல்!

திருவள்ளுவர் தினமான இன்று அரசின் தடையை மீறி கோவையில் இறைச்சி விற்பனை செய்த 3 கடைகளில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், 20 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து தலா ரூ.1,000 அபராதம் விதித்தனர்.


கோவை: திருவள்ளுவர் தினமான இன்று இறைச்சிக் கடைகள் இயங்கக் கூடாது என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், கோவை மாநகரில் அரசின் தடையை மீறி இறைச்சி மற்றும் மது விற்பனை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கோவை மாநகர் பகுதியில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் வடவள்ளி, கவுண்டம்பாளையம், பி.என்.புதூர் ஆகிய பகுதிகளில் இறைச்சி கடைகள் செயல்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.



இதன் அடிப்படையில், அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், மூன்று கடைகளில் இருந்து சுமார் 20 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். மேலும் தலா 1000 ரூபாய் அபராதமும் விதித்தனர்.

இதேபோல் வரும் பிப்ரவரி மாதம் 5ம் தேதி வள்ளலார் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

தடையை மீறி இறைச்சி விற்பனை செய்த கடைகளில் சோதனை மேற்கொண்டு அதிகாரிகள் அபராதம் விதித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...