அரசின் தடையை மீறி கோவையில் இறைச்சி விற்பனை - 20 கிலோ இறைச்சி பறிமுதல்!

திருவள்ளுவர் தினமான இன்று அரசின் தடையை மீறி கோவையில் இறைச்சி விற்பனை செய்த 3 கடைகளில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், 20 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து தலா ரூ.1,000 அபராதம் விதித்தனர்.


கோவை: திருவள்ளுவர் தினமான இன்று இறைச்சிக் கடைகள் இயங்கக் கூடாது என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், கோவை மாநகரில் அரசின் தடையை மீறி இறைச்சி மற்றும் மது விற்பனை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கோவை மாநகர் பகுதியில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் வடவள்ளி, கவுண்டம்பாளையம், பி.என்.புதூர் ஆகிய பகுதிகளில் இறைச்சி கடைகள் செயல்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.



இதன் அடிப்படையில், அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், மூன்று கடைகளில் இருந்து சுமார் 20 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். மேலும் தலா 1000 ரூபாய் அபராதமும் விதித்தனர்.

இதேபோல் வரும் பிப்ரவரி மாதம் 5ம் தேதி வள்ளலார் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

தடையை மீறி இறைச்சி விற்பனை செய்த கடைகளில் சோதனை மேற்கொண்டு அதிகாரிகள் அபராதம் விதித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...