அரசின் தடையை மீறி கோவையில் இறைச்சி விற்பனை - 20 கிலோ இறைச்சி பறிமுதல்!

திருவள்ளுவர் தினமான இன்று அரசின் தடையை மீறி கோவையில் இறைச்சி விற்பனை செய்த 3 கடைகளில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், 20 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து தலா ரூ.1,000 அபராதம் விதித்தனர்.


கோவை: திருவள்ளுவர் தினமான இன்று இறைச்சிக் கடைகள் இயங்கக் கூடாது என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், கோவை மாநகரில் அரசின் தடையை மீறி இறைச்சி மற்றும் மது விற்பனை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கோவை மாநகர் பகுதியில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் வடவள்ளி, கவுண்டம்பாளையம், பி.என்.புதூர் ஆகிய பகுதிகளில் இறைச்சி கடைகள் செயல்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.



இதன் அடிப்படையில், அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், மூன்று கடைகளில் இருந்து சுமார் 20 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். மேலும் தலா 1000 ரூபாய் அபராதமும் விதித்தனர்.

இதேபோல் வரும் பிப்ரவரி மாதம் 5ம் தேதி வள்ளலார் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

தடையை மீறி இறைச்சி விற்பனை செய்த கடைகளில் சோதனை மேற்கொண்டு அதிகாரிகள் அபராதம் விதித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...