கோவை சிங்காநல்லூரில் திமுக கலை இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா

சிங்காநல்லூரில் திமுக சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், திமுக மகளிரணியினர் நூற்றுக்கும் மேற்பட்ட பானைகளில் சமத்துவ பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.



கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதி திமுக சார்பில் கலை இலக்கிய அணி மாநில துணைச்செயலாளர் மீனா ஜெயக்குமார் மற்றும் செயலாளர் எஸ்.எம்.சாமி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில், திமுக மகளிர் அணியை சேர்ந்தவர்கள், 100க்கும் மேற்பட்ட மண் பானைகளில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.



ஆண்டுதோறும் நடைபெறும் இந்த சமத்துவ பொங்கல் விழாவில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு "பொங்கலோ பொங்கல்" என முழக்கமிட்டு, தை முதல் நாளையும், பொங்கல் திருநாளையும், தமிழ் புத்தாண்டையும் வரவேற்றனர்.



இந்த சமத்துவ பொங்கல் விழாவில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...