கோவை சிங்காநல்லூரில் திமுக கலை இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா

சிங்காநல்லூரில் திமுக சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், திமுக மகளிரணியினர் நூற்றுக்கும் மேற்பட்ட பானைகளில் சமத்துவ பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.



கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதி திமுக சார்பில் கலை இலக்கிய அணி மாநில துணைச்செயலாளர் மீனா ஜெயக்குமார் மற்றும் செயலாளர் எஸ்.எம்.சாமி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில், திமுக மகளிர் அணியை சேர்ந்தவர்கள், 100க்கும் மேற்பட்ட மண் பானைகளில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.



ஆண்டுதோறும் நடைபெறும் இந்த சமத்துவ பொங்கல் விழாவில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு "பொங்கலோ பொங்கல்" என முழக்கமிட்டு, தை முதல் நாளையும், பொங்கல் திருநாளையும், தமிழ் புத்தாண்டையும் வரவேற்றனர்.



இந்த சமத்துவ பொங்கல் விழாவில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...