சர்வதேச யோகா போட்டி - சாதனை படைத்த திருப்பூர் குட்டீஸ்..!

புதுச்சேரியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான யோகா போட்டியில் திருப்பூரைச் சேர்ந்த மாணவி சக்தி சஞ்சனா மற்றும் மாணவன் சீட்டீஸ் ஆகியோர் இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.



திருப்பூர்: புதுச்சேரி சுற்றுலாத் துறை சார்பில் புதுச்சேரி காமராஜர் மணி மண்டபத்தில் 28 வது சர்வதேச யோகா திருவிழா போட்டிகள் நடைபெற்றன. கடந்த 4ம் தேதி முதல் 7 ஆம் தேதிவரை நான்கு நாட்கள் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன.

சர்வதேச அளவிலான இந்த யோகா போட்டியில் ரஷ்யா மற்றும் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, ஹரியானா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். இதில், ஒன்பது வயது முதல் மூத்த குடிமக்கள் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.



இதில், 9 வயது முதல் 14 வயது வரையோருக்கான பிரிவில் திருப்பூரை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி சக்திசஞ்சனா (வயது12) கலந்து கொண்டு வீரபத்ராசனம் உட்பட 3 ஆசனங்கள் செய்து, இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.



இதேபோன்று, கணியூரைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவன் சிட்டீஸ் (வயது10)-ம், யோகா போட்டியில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு, மாணவ-மாணவியருக்கு பதக்கமும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.



சர்வதேச யோகாப் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்து சொந்த ஊர் திரும்பிய மாணவி சக்தி சஞ்சனா மற்றும் மாணவன் சீட்டீஸ்-க்கு யோகா பயிற்சியாளர்கள், உறவினர்கள், பள்ளி மாணவ-மாணவியர், தேசிய யோகா சாதனையாளர் யோகா வைஷ்ணவி உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Newsletter

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...