'தமிழ்நாடு ஆளுநர் பதவி விலக வேண்டும்..!' - திருப்பூரில் திராவிடர் விடுதலை கழகம் போராட்டம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநரை பதவி விலககோரி திருப்பூரில் திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்.


திருப்பூர்: சமீபத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென புறப்பட்டு சென்றது பெரும் சர்ச்சைக்குள்ளானது. ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு சின்னத்தை தவிர்த்ததை எதிர்த்து, அரசியல் கட்சிகள் மற்றும் முற்போக்கு அமைப்புகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், ஆளுநரை பதவி விலககோரி திருப்பூரில் மாநகராட்சி அலுவலகம் எதிரில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில், தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின்போது அண்ணா, அம்பேத்கர், பெரியார், கருணாநிதி உள்ளிட்டோரின் பெயர்களை கூற மறுத்து உரை வாசித்த ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்.



ஆளுநரின் பொங்கல் அழைப்பிதழில் தமிழக அரசின் சின்னம் இடம்பெறாமல் இந்திய அரசின் சின்னம் மற்றும் இடம் பெறச் செய்த தமிழகம் என குறிப்பிட்ட ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...