'தமிழ்நாடு ஆளுநர் பதவி விலக வேண்டும்..!' - திருப்பூரில் திராவிடர் விடுதலை கழகம் போராட்டம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநரை பதவி விலககோரி திருப்பூரில் திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்.


திருப்பூர்: சமீபத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென புறப்பட்டு சென்றது பெரும் சர்ச்சைக்குள்ளானது. ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு சின்னத்தை தவிர்த்ததை எதிர்த்து, அரசியல் கட்சிகள் மற்றும் முற்போக்கு அமைப்புகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், ஆளுநரை பதவி விலககோரி திருப்பூரில் மாநகராட்சி அலுவலகம் எதிரில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில், தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின்போது அண்ணா, அம்பேத்கர், பெரியார், கருணாநிதி உள்ளிட்டோரின் பெயர்களை கூற மறுத்து உரை வாசித்த ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்.



ஆளுநரின் பொங்கல் அழைப்பிதழில் தமிழக அரசின் சின்னம் இடம்பெறாமல் இந்திய அரசின் சின்னம் மற்றும் இடம் பெறச் செய்த தமிழகம் என குறிப்பிட்ட ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...