'தமிழ்நாடு ஆளுநர் பதவி விலக வேண்டும்..!' - திருப்பூரில் திராவிடர் விடுதலை கழகம் போராட்டம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநரை பதவி விலககோரி திருப்பூரில் திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்.


திருப்பூர்: சமீபத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென புறப்பட்டு சென்றது பெரும் சர்ச்சைக்குள்ளானது. ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு சின்னத்தை தவிர்த்ததை எதிர்த்து, அரசியல் கட்சிகள் மற்றும் முற்போக்கு அமைப்புகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், ஆளுநரை பதவி விலககோரி திருப்பூரில் மாநகராட்சி அலுவலகம் எதிரில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில், தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின்போது அண்ணா, அம்பேத்கர், பெரியார், கருணாநிதி உள்ளிட்டோரின் பெயர்களை கூற மறுத்து உரை வாசித்த ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்.



ஆளுநரின் பொங்கல் அழைப்பிதழில் தமிழக அரசின் சின்னம் இடம்பெறாமல் இந்திய அரசின் சின்னம் மற்றும் இடம் பெறச் செய்த தமிழகம் என குறிப்பிட்ட ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Newsletter

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 7-ல் டாப்செட்கோ கடன் மேளா

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் கடன் மேளா செப்டம்பர் 7-ல் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற...

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...