கோவையில் பழமையான மரங்களை வெட்டிய நபர்கள் - நடவடிக்கைகோரி நூதன வழிபாடு!

கோவையில் பழமை வாய்ந்த மரங்களை வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை கவுண்டம்பாளையம் அடுத்துள்ள கவுண்டர்மில்ஸ் பஸ் நிறுத்தம் அருகே சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலான மிகவும் பழமையான எல்லை மாரியம்மன் கோவில் உள்ளது. அதன் பின்புறம் 50 ஆண்டுகளுக்கு மேலான புளியமரம் ஒன்று உள்ளது. புளியமரத்துடன் இணைந்து ஆலமரமும் வளர்ந்துள்ளது. புளியமரம் பட்டுப்போன காலத்தில் ஆலமரம் அதனை முழுவதுமாக காய்ந்துபோகாமல் பாதுகாத்து மீண்டும் வளர செய்தது.



இந்த நிலையில், அருகிலுள்ள தனியார்களுக்கு சொந்தமான கடைகளின் விளம்பர பலகைகள் வைப்பதற்காக இந்த மரத்தின் பெரிய கிளைகளை சிலர் வெட்டியுள்ளனர்.



இதனை அறிந்த கோயமுத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

இதையடுத்து, மரத்தின் கிளைகளை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வடக்கு கோட்டாட்சியர், வட்டாட்சியர், தேசிய நெடுஞ்சாலைதுறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தபால் மூலம் பொதுமக்களும், சாலைகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகளும் புகார் மனுக்களை அனுப்பினர்.



முன்னதாக வெட்டப்பட்ட மரத்திற்கு சிகப்பு துணி கட்டி மஞ்சள், குங்குமம் பூசி வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் உள்ளிட்டவைகளை வைத்து கற்பூரம் காட்டி சிறப்பு பூஜைகள் செய்து அவர்கள் மரத்தை சுற்றி வந்தனர்.



புகார் மனுவை மரத்தின் அருகில் வைத்து மரம் வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வழிபாடு செய்தனர்.



இந்த நூதன வழிபாட்டால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோயமுத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்க செயலாளர் தேவேந்திரன், பொருளாளர் டி.ஆர்.ராஜேந்திரன், துணை செயலாளர் பன்னீர்செல்வம், நிர்வாக்குழு உறுப்பினர் ஜீவா, முருகதாஸ், மோகன்ராஜ், முத்துகுமார், சதாசிவம், சிவசங்கர் உட்பட பலர் இதில் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...