கோவையில் விவசாய நிலங்களில் தொடரும் காட்டுயானைகள் அட்டூழியம் - சிசிடிவி காட்சி வெளியீடு

கோவை பாப்பநாய்க்கன்பாளையத்தில் விவசாயத் தோட்டத்தில் நேற்றிரவு 2 காட்டுயானைகள் புகுந்து பாப்பாளி மரங்களை சேதப்படுத்திச் சென்றன. இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள ஆனைகட்டி, மாங்கரை, தடாகம் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இருந்து வருகின்றன. அவ்வப்போது, இந்த யானைகள் தனியாகவும், கூட்டமாகவும் உணவு தேடி மலை அடிவார பகுதிகளில் உள்ள தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்துவருவது வாடிக்கையாக இருந்துவருகிறது.

அப்படி நுழையும் காட்டுயானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தடாகம் சுற்றுப் பகுதிகளில் ஒற்றைக் காட்டு யானை மற்றும் கூட்டமாக வரும் யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதும், குடியிருப்புப் பகுதியிகளில் உணவு தேடியும் சுற்றித் திரிவதுமாக இருக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்துவருகின்றனர்.

இந்த நிலையில், பன்னிமடையை அடுத்துள்ள பாப்பநாயக்கன்பாளையத்தில் நரசிம்ம ராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.



இந்தத் தோட்டத்தில் நேற்று இரவு புகுந்த 2 காட்டு யானைகள், அங்கு பயிரிடப்பட்டிருந்த பப்பாளி மரங்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.



காட்டுயானைகளின் செயல்கள் அங்கு பொருந்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நிலையில், அந்தக் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

விவசாய நிலங்களில் காட்டுயானைகள் நுழைவதை தடுக்க வனத்துறை மற்றும் தமிழக அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமெனவும், காட்டுயானைகளால் சேதப்படுத்தப்படும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...