எடப்பாடி பழனிசாமியை விட எஸ்.பி வேலுமணி சிறந்தவர் - புகழேந்தி புகழாரம்

அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி காட்டிலும் எஸ்.பி வேலுமணியே சிறந்தவர் என அதிமுக ஓபிஎஸ் அணி கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் அதிமுக ஓபிஎஸ் அணி கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், உச்சநீதிமன்றம் வழக்குகளை ஒருவார காலம் தெளிவாகக் கேட்டு அறிந்திருக்கிறார்கள். நாளைய தீர்ப்பைச் சரித்திரம் சொல்லும். உன்னதமான தீர்ப்பை உச்சநீதிமன்றத்திலிருந்து கிடைக்கப் பெறுவோம்.

ஓபிஎஸ் தான் இந்த கழகத்தை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்கின்ற தீர்ப்பு நிச்சயமாக உச்ச நீதிமன்றத்திலிருந்து வரும் என்கின்ற நம்பிக்கை தங்களிடத்தில் மிகத் தெளிவாக உள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், என்னைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியைக் காட்டிலும் எஸ்.பி.வேலுமணி தான் 100சதவீதம் சிறந்தவர். சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி கருப்பு சட்டை அணிந்து செல்லும் போது, அவராவது ஈபிஎஸ்-க்கு புத்திச்சொல்ல வேண்டுமல்லவா? அல்லது பொன்னையன் ஆவது சொல்ல வேண்டும் அல்லவா, என வினவினார். மேலும் எடப்பாடி அணியில் இருக்கக்கூடியவர்கள் அறிவை அடைமானம் வைத்து விட்டார்களா என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்தார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...