எடப்பாடி பழனிசாமியை விட எஸ்.பி வேலுமணி சிறந்தவர் - புகழேந்தி புகழாரம்

அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி காட்டிலும் எஸ்.பி வேலுமணியே சிறந்தவர் என அதிமுக ஓபிஎஸ் அணி கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் அதிமுக ஓபிஎஸ் அணி கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், உச்சநீதிமன்றம் வழக்குகளை ஒருவார காலம் தெளிவாகக் கேட்டு அறிந்திருக்கிறார்கள். நாளைய தீர்ப்பைச் சரித்திரம் சொல்லும். உன்னதமான தீர்ப்பை உச்சநீதிமன்றத்திலிருந்து கிடைக்கப் பெறுவோம்.

ஓபிஎஸ் தான் இந்த கழகத்தை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்கின்ற தீர்ப்பு நிச்சயமாக உச்ச நீதிமன்றத்திலிருந்து வரும் என்கின்ற நம்பிக்கை தங்களிடத்தில் மிகத் தெளிவாக உள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், என்னைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியைக் காட்டிலும் எஸ்.பி.வேலுமணி தான் 100சதவீதம் சிறந்தவர். சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி கருப்பு சட்டை அணிந்து செல்லும் போது, அவராவது ஈபிஎஸ்-க்கு புத்திச்சொல்ல வேண்டுமல்லவா? அல்லது பொன்னையன் ஆவது சொல்ல வேண்டும் அல்லவா, என வினவினார். மேலும் எடப்பாடி அணியில் இருக்கக்கூடியவர்கள் அறிவை அடைமானம் வைத்து விட்டார்களா என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...