எடப்பாடி பழனிசாமியை விட எஸ்.பி வேலுமணி சிறந்தவர் - புகழேந்தி புகழாரம்

அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி காட்டிலும் எஸ்.பி வேலுமணியே சிறந்தவர் என அதிமுக ஓபிஎஸ் அணி கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் அதிமுக ஓபிஎஸ் அணி கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், உச்சநீதிமன்றம் வழக்குகளை ஒருவார காலம் தெளிவாகக் கேட்டு அறிந்திருக்கிறார்கள். நாளைய தீர்ப்பைச் சரித்திரம் சொல்லும். உன்னதமான தீர்ப்பை உச்சநீதிமன்றத்திலிருந்து கிடைக்கப் பெறுவோம்.

ஓபிஎஸ் தான் இந்த கழகத்தை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்கின்ற தீர்ப்பு நிச்சயமாக உச்ச நீதிமன்றத்திலிருந்து வரும் என்கின்ற நம்பிக்கை தங்களிடத்தில் மிகத் தெளிவாக உள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், என்னைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியைக் காட்டிலும் எஸ்.பி.வேலுமணி தான் 100சதவீதம் சிறந்தவர். சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி கருப்பு சட்டை அணிந்து செல்லும் போது, அவராவது ஈபிஎஸ்-க்கு புத்திச்சொல்ல வேண்டுமல்லவா? அல்லது பொன்னையன் ஆவது சொல்ல வேண்டும் அல்லவா, என வினவினார். மேலும் எடப்பாடி அணியில் இருக்கக்கூடியவர்கள் அறிவை அடைமானம் வைத்து விட்டார்களா என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...