உலகில் சரியான நேரத்திற்கு விமானத்தை இயக்கும் டாப் 20 விமான நிலையங்கள் - கோவைக்கு 13வது இடம்!

உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் சரியான நேரத்திற்கு விமானங்களை இயக்கும் விமான நிலையங்களின் பட்டியலில் கோயம்புத்தூர் விமான நிலையம் 13வது இடத்தைப் பிடித்து இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளது.



கோவை: உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் சரியான நேரத்திற்கு விமானங்களை இயக்கும் 20 விமான நிலையங்களின் பட்டியல் விமான நிலையங்களுக்கான அதிகாரப்பூர்வ கையேட்டில் (Official Airline Guide )வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள், அங்கிருந்து புறப்படும் விமானங்கள் ஆகியவை சரியான நேரத்திற்கு இயக்கப் படுகிறதா என்பதை மதிப்பீடு செய்து, On Time Performence (OTP) அடிப்படையில் ஒவ்வொரு விமான நிலையத்திற்கும் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, 20 விமான நிலையங்களின் பட்டியலில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 10 விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.. அதுமட்டுமின்றி, 91.45%,91.44%,91.34%,90.78% சதவீத ஓடிபி-உடன் இந்தப் பட்டியலில் முதல் 4 இடங்களையும் ஜப்பானே பிடித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவின் டர்பன் கிங் சாஹா விமான நிலையம் 89.73% ஓடிபி-உடன் 5வது இடத்தில் உள்ளது. 6, 7,10,11,12வது இடங்களில் ஜப்பான் நாட்டு விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல், பிரேசில், பனாமா, பெரு, ஈக்வேடார் நாடுகளைச் சேர்ந்த விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.



இந்த சர்வதேச தரப்பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கோயம்புத்தூர் விமான நிலையம் 88.01% ஓடிபியுடன் 13வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவிலேயே கோயம்புத்தூர் விமான நிலையம் மட்டுமே, சரியான நேரத்திற்கு விமானங்களை இயக்கும் உலகின் 20 விமான நிலையங்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...