விவேகானந்தர் பிறந்த நாள்: உதகையில் எழுத்தாளர் ஜே.ஜே.குட்வின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை!

சுவாமி விவேகானந்தரின் 160வது பிறந்தநாள் விழாவையொட்டி உதகையில் உள்ள விவேகானந்தரின் சுருக்க எழுத்தாளர் ஜே.ஜே.குட்வின் நினைவிடத்தில், ராமகிருஷ்ண மடம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.



நீலகிரி: சுவாமி விவேகானந்தரின் 160-வது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள புனித தாமஸ் தேவாலயத்தில் சுவாமி விவேகானந்தரின் சுருக்க எழுத்தாளர் ஜே.ஜே.குட்வின் நினைவிடத்தில் மலர் தூவி சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.

உதகை ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி பரகீர்த்தமானந்தா மகராஜ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதில், சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகள் உலகிற்கு கிடைப்பதற்கு சுருக்க எழுத்தாளர் J J குட்வின் பணி மிகவும் முக்கியமானது என்றும், இளைய சமூகம் ஒழுக்கமான வாழ்க்கைக்கும் மன வலிமை மிக்க தெளிவான சிந்தனைக்கு விவேகானந்தரின் வார்த்தைகள் கடைபிடிக்க வேண்டும் எனவும் எடுத்துரைக்கப்பட்டது.



தாமஸ் தேவாலய அருட்தந்தை இம்மானுவேல் வேல்வேந்தர் பிரார்த்தனை செய்து பேசுகையில், அனைத்து சமூக மக்களும் அன்போடும் அமைதியோடும் வாழ்வதற்கு இது போன்ற குருமார்களின் கருத்துக்கள் நமக்கு வழிகாட்டுதலாக உள்ளது, என்றார்.

இதனை தொடர்ந்து அருட்தந்தை கிரிஸ்டோபர் பேசுகையில், "மனித வாழ்க்கை மகத்துவமானது. சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகள் வாழ்வில் கடைபிடித்து வாழ்வதே சிறப்பு" என்றார்.



இந்நிகழ்விற்கு பிரிக்ஸ் நினைவு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உதகையில் உள்ள மானஸ் அமைப்பு மற்றும் ராமகிருஷ்ணா மடம் சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில், மானஸ் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் சிவதாஸ் நன்றி தெரிவித்தார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...