விவேகானந்தர் பிறந்த நாள்: உதகையில் எழுத்தாளர் ஜே.ஜே.குட்வின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை!

சுவாமி விவேகானந்தரின் 160வது பிறந்தநாள் விழாவையொட்டி உதகையில் உள்ள விவேகானந்தரின் சுருக்க எழுத்தாளர் ஜே.ஜே.குட்வின் நினைவிடத்தில், ராமகிருஷ்ண மடம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.



நீலகிரி: சுவாமி விவேகானந்தரின் 160-வது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள புனித தாமஸ் தேவாலயத்தில் சுவாமி விவேகானந்தரின் சுருக்க எழுத்தாளர் ஜே.ஜே.குட்வின் நினைவிடத்தில் மலர் தூவி சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.

உதகை ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி பரகீர்த்தமானந்தா மகராஜ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதில், சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகள் உலகிற்கு கிடைப்பதற்கு சுருக்க எழுத்தாளர் J J குட்வின் பணி மிகவும் முக்கியமானது என்றும், இளைய சமூகம் ஒழுக்கமான வாழ்க்கைக்கும் மன வலிமை மிக்க தெளிவான சிந்தனைக்கு விவேகானந்தரின் வார்த்தைகள் கடைபிடிக்க வேண்டும் எனவும் எடுத்துரைக்கப்பட்டது.



தாமஸ் தேவாலய அருட்தந்தை இம்மானுவேல் வேல்வேந்தர் பிரார்த்தனை செய்து பேசுகையில், அனைத்து சமூக மக்களும் அன்போடும் அமைதியோடும் வாழ்வதற்கு இது போன்ற குருமார்களின் கருத்துக்கள் நமக்கு வழிகாட்டுதலாக உள்ளது, என்றார்.

இதனை தொடர்ந்து அருட்தந்தை கிரிஸ்டோபர் பேசுகையில், "மனித வாழ்க்கை மகத்துவமானது. சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகள் வாழ்வில் கடைபிடித்து வாழ்வதே சிறப்பு" என்றார்.



இந்நிகழ்விற்கு பிரிக்ஸ் நினைவு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உதகையில் உள்ள மானஸ் அமைப்பு மற்றும் ராமகிருஷ்ணா மடம் சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில், மானஸ் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் சிவதாஸ் நன்றி தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...