'நொய்யல் ஆற்றை மீட்டெடுப்பது அவசியம்..!' - கோவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஆளுநர் அரசியல் செய்யக்கூடாது. தமிழக அரசும் ஆளுநரை மதிக்க வேண்டும். ஆளுநர் அரசியல் சாசன பொறுப்பில் இருப்பவர் வேறுவிதமான அரசியலில் அவர் ஈடுபடக்ககூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் பசுமை தாயகம் சார்பில் "நொய்யல் ஆற்றை மீட்டு எடுப்போம்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் இன்று நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக கோவை வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

நொய்யல் ஆற்றை மீட்டு எடுப்போம் என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்களின் முக்கிய நோக்கமே நொய்யல் ஆற்றை மீட்க வேண்டும் என்பதுதான். நொய்யலைக் காப்பற்ற வேண்டும் என்ற நிலைபோய், தற்போது மீட்க வேண்டும் என்ற நிலையில் நாம் உள்ளோம். முதல் கட்டமான முயற்சி.

மன்னராட்சிக் காலத்தில், சேர, சோழ, பாண்டிய மண்னர்கள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நொய்யலை பாதுகாத்தனர். 32 அணை, குளம் மற்றும் ஏரிகளை உருவாக்கி இந்த பகுதியில் வளர்ச்சிக்கான திட்டத்தை வகுத்ததனர்.

நொய்யலாற்றின் மூலம் சுமார் 4.5 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்றுவந்த நிலையில், கடந்த 40 ஆண்டுகாலமாக திடக்கழிவு, ரசாயன கழிவு, சாயக்கழிவுகள், சாக்கடை கழிவு, மணல் கொள்ளை, செங்கல் சூளை மணல் கொள்ளை, போன்றவற்றாலும், ஆக்கிரமிப்புகளாலும் ஆறு கடுமையாக பாதிக்கபட்டுள்ளது

கண்டிப்பாக இந்த ஆற்றை காப்பாற்ற வேண்டும். பாமக மற்றும் பசுமை தாயகமும் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மக்களை ஒன்றினைத்து நொய்யலை மீட்டு எடுப்பேன்" என்ற நம்பிக்கையில் இங்கு வந்திருக்கிறேன்.

நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீர், சுத்திகரிப்பு என்பதே இல்லாமல் திருப்பூரில்தான் அதிகளவில் மாசடைகிறது. அரசியல் நோக்கம் பாராமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

நொய்யலுக்கு என்று 2500 ஆண்டுகாலம் கடந்த வரலாறு உள்ளது. நொய்யலுக்கும் சோழர்களுக்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது. கடந்த 5, 10 ஆண்டுகளாக நடைபெற்ற பணிகளில் பல்வேறு ஊழல்கள் நடந்திருப்பது உண்மைதான்.

ஆளுநரும் ஆளும் கட்சியும் இணைந்து தமிழக முன்னேற்றத்திற்கு செயல்பட வேண்டும். ஆளுநர் அரசியல் செய்யக்கூடாது, தமிழக அரசும் ஆளுநரை மதிக்க வேண்டும். ஆளுநர் அரசியல் சாசன பொறுப்பில் இருப்பவர் வேறுவிதமான அரசியலில் அவர் ஈடுபடக்ககூடாது

மாநிலத்தில் தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் நிலையில், தமிழ்நாடா? தமிழகமா? திராவிடமா? திராவிட நாடா? மத்திய அரசா? ஒன்றிய அரசா? போன்ற விவாதங்களில் ஆளுநர் ஈடுபடக்கூடாது.

ஆன்லைன் சூதாட்டத்தால், வாரம் ஒரு தற்கொலை நடக்கிறது. அவர்களின் குடும்பம் நிற்கதியில் நிற்கிறது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க ஆளுநர் கையெழுத்து போடாமல் காலதாமதம் செய்து வருவது ஏன்.

ரேஷன் கடை பொங்கல் பரிசு என்பது எப்போதுமே வரும் பிரச்சனைதான். பொங்கல் பரிசு தொகை ரூ.1000 -ஐ ஏன் பயனாளர்கள் வங்கி கணக்கில் செலுத்த கூடாது? இந்த டிஜிட்டல் உலகில் இது சாத்தியம் தானே? அரசால் ஏன் அதனை செய்ய இயலவில்லை?

2026ல் பாமக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைப்பதே எங்கள் இலக்கு. கேரளா அரசு டிஜிட்டல் சர்வே தொடர்பாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு வரும், தமிழக அரசு ஒரு அமைச்சாரவை குழுவை அமைத்து கேரள முதல்வரிடம் பேசி இரு மாநிலமும் இணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...