'நொய்யல் ஆற்றை மீட்டெடுப்பது அவசியம்..!' - கோவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஆளுநர் அரசியல் செய்யக்கூடாது. தமிழக அரசும் ஆளுநரை மதிக்க வேண்டும். ஆளுநர் அரசியல் சாசன பொறுப்பில் இருப்பவர் வேறுவிதமான அரசியலில் அவர் ஈடுபடக்ககூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் பசுமை தாயகம் சார்பில் "நொய்யல் ஆற்றை மீட்டு எடுப்போம்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் இன்று நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக கோவை வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

நொய்யல் ஆற்றை மீட்டு எடுப்போம் என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்களின் முக்கிய நோக்கமே நொய்யல் ஆற்றை மீட்க வேண்டும் என்பதுதான். நொய்யலைக் காப்பற்ற வேண்டும் என்ற நிலைபோய், தற்போது மீட்க வேண்டும் என்ற நிலையில் நாம் உள்ளோம். முதல் கட்டமான முயற்சி.

மன்னராட்சிக் காலத்தில், சேர, சோழ, பாண்டிய மண்னர்கள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நொய்யலை பாதுகாத்தனர். 32 அணை, குளம் மற்றும் ஏரிகளை உருவாக்கி இந்த பகுதியில் வளர்ச்சிக்கான திட்டத்தை வகுத்ததனர்.

நொய்யலாற்றின் மூலம் சுமார் 4.5 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்றுவந்த நிலையில், கடந்த 40 ஆண்டுகாலமாக திடக்கழிவு, ரசாயன கழிவு, சாயக்கழிவுகள், சாக்கடை கழிவு, மணல் கொள்ளை, செங்கல் சூளை மணல் கொள்ளை, போன்றவற்றாலும், ஆக்கிரமிப்புகளாலும் ஆறு கடுமையாக பாதிக்கபட்டுள்ளது

கண்டிப்பாக இந்த ஆற்றை காப்பாற்ற வேண்டும். பாமக மற்றும் பசுமை தாயகமும் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மக்களை ஒன்றினைத்து நொய்யலை மீட்டு எடுப்பேன்" என்ற நம்பிக்கையில் இங்கு வந்திருக்கிறேன்.

நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீர், சுத்திகரிப்பு என்பதே இல்லாமல் திருப்பூரில்தான் அதிகளவில் மாசடைகிறது. அரசியல் நோக்கம் பாராமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

நொய்யலுக்கு என்று 2500 ஆண்டுகாலம் கடந்த வரலாறு உள்ளது. நொய்யலுக்கும் சோழர்களுக்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது. கடந்த 5, 10 ஆண்டுகளாக நடைபெற்ற பணிகளில் பல்வேறு ஊழல்கள் நடந்திருப்பது உண்மைதான்.

ஆளுநரும் ஆளும் கட்சியும் இணைந்து தமிழக முன்னேற்றத்திற்கு செயல்பட வேண்டும். ஆளுநர் அரசியல் செய்யக்கூடாது, தமிழக அரசும் ஆளுநரை மதிக்க வேண்டும். ஆளுநர் அரசியல் சாசன பொறுப்பில் இருப்பவர் வேறுவிதமான அரசியலில் அவர் ஈடுபடக்ககூடாது

மாநிலத்தில் தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் நிலையில், தமிழ்நாடா? தமிழகமா? திராவிடமா? திராவிட நாடா? மத்திய அரசா? ஒன்றிய அரசா? போன்ற விவாதங்களில் ஆளுநர் ஈடுபடக்கூடாது.

ஆன்லைன் சூதாட்டத்தால், வாரம் ஒரு தற்கொலை நடக்கிறது. அவர்களின் குடும்பம் நிற்கதியில் நிற்கிறது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க ஆளுநர் கையெழுத்து போடாமல் காலதாமதம் செய்து வருவது ஏன்.

ரேஷன் கடை பொங்கல் பரிசு என்பது எப்போதுமே வரும் பிரச்சனைதான். பொங்கல் பரிசு தொகை ரூ.1000 -ஐ ஏன் பயனாளர்கள் வங்கி கணக்கில் செலுத்த கூடாது? இந்த டிஜிட்டல் உலகில் இது சாத்தியம் தானே? அரசால் ஏன் அதனை செய்ய இயலவில்லை?

2026ல் பாமக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைப்பதே எங்கள் இலக்கு. கேரளா அரசு டிஜிட்டல் சர்வே தொடர்பாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு வரும், தமிழக அரசு ஒரு அமைச்சாரவை குழுவை அமைத்து கேரள முதல்வரிடம் பேசி இரு மாநிலமும் இணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...