கடும் குளிரில் உறைந்த கோவை - மக்கள் அவதி!

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் நிலவிய கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த புத்தாண்டு முதல் குளிரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நள்ளிரவு தொடங்கி காலை வரை அதிகப்படியாக குளிர் நிலவி வருகிறது.



அந்த வகையில், இன்றும் கோவை மாநகர் மற்றும் சுற்றுப் பகுதிகள் உட்பட மாவட்டத்தில் பல இடங்களிலும் கடுமையான குளிர் நிலவியது.

மழைபோல் கொட்டிய பனியால், வீடுகளை விட்டு மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், மாவட்டத்தின் பல இடங்களிலும் குறைவான வெப்பநிலையே பதிவாகியுள்ளது.



அதன்படி, ஆனைமலையில் 14.9 டிகிரி செல்சியசும், அன்னூரில் 14.4 டிகிரி செல்சியசும், காரமடையில் 13.6 டிகிரி செல்சியசும், மதுக்கரையில் 19.6 டிகிரி செல்சியசும், சுல்தான்பேட்டையில் 16.6 டிகிரி செல்சியசும், சூலூரில் 14.5 டிகிரி செல்சியசும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பகுதியில் 16.6 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகியுள்ளது.

தைப்பொங்கல் வரை இந்த பனிப்பொழிவு நிலவும் எனவும், கோவையில் குளிரின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...