கடும் குளிரில் உறைந்த கோவை - மக்கள் அவதி!

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் நிலவிய கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த புத்தாண்டு முதல் குளிரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நள்ளிரவு தொடங்கி காலை வரை அதிகப்படியாக குளிர் நிலவி வருகிறது.



அந்த வகையில், இன்றும் கோவை மாநகர் மற்றும் சுற்றுப் பகுதிகள் உட்பட மாவட்டத்தில் பல இடங்களிலும் கடுமையான குளிர் நிலவியது.

மழைபோல் கொட்டிய பனியால், வீடுகளை விட்டு மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், மாவட்டத்தின் பல இடங்களிலும் குறைவான வெப்பநிலையே பதிவாகியுள்ளது.



அதன்படி, ஆனைமலையில் 14.9 டிகிரி செல்சியசும், அன்னூரில் 14.4 டிகிரி செல்சியசும், காரமடையில் 13.6 டிகிரி செல்சியசும், மதுக்கரையில் 19.6 டிகிரி செல்சியசும், சுல்தான்பேட்டையில் 16.6 டிகிரி செல்சியசும், சூலூரில் 14.5 டிகிரி செல்சியசும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பகுதியில் 16.6 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகியுள்ளது.

தைப்பொங்கல் வரை இந்த பனிப்பொழிவு நிலவும் எனவும், கோவையில் குளிரின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...