கோவையில் பொங்கலுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு கோவையிலிருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு 240 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் சொந்த ஊர் செல்வது வழக்கம்.

இதற்கென அரசு சார்பில் கடந்த பல ஆண்டுகளாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. அதன்படி, இந்த ஆண்டு கோவையிலிருந்து, மதுரை, தேனி, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 12 ஆம் தேதிமுதல் 14 ஆம் தேதி வரை மதுரை, திருச்சி, சேலம், தேனி ஆகிய மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரை மாவட்டத்திற்கு100 பேருந்துகளும், தேனிக்கு 40 பேருந்துகளும், திருச்சி மற்றும் சேலத்திற்கு தலா 50 பேருந்துகளும் என மொத்தம் 240 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...