ஈஷா மையம் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சி - கோவையில் இந்து முன்னணி மாநில தலைவர் குற்றச்சாட்டு

ஆன்மீக மையமான ஈஷா மீது களங்கம் ஏற்படுத்தி பொது அமைதியை சீர்குலைக்கும் கம்யூனிஸ்ட் நக்சல்களைக் கண்டித்து கோவையில் இந்து முன்னணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: ஆன்மீக மையமான ஈஷா மீது களங்கம் ஏற்படுத்தி பொது அமைதியை சீர்குலைக்கும் கம்யூனிஸ்ட் நக்சல்களை கண்டித்து கோவை மாவட்ட மாநகர் இந்து முன்னணி சார்பில் மாபெரும் கண்டன தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.



இதில் 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம், கோவை ஈஷா மையம் பொறுத்தவரை எந்த மதமும் சம்மதம் தான். இந்தியா அல்லாமல் அனைத்து நாடுகளிலும் யோகா பயின்று வருகிறார்கள். இதனை உடைக்க வேண்டும் என ஒரு சிலர் முயற்சி செய்து வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், கோவை தொழில் நகரத்தை கம்யூனிஸ்ட்டுகள் முடக்கப் பார்க்கிறார்கள்.

மேலும் ஈஷா மையத்தைப் பொருத்தவரை கல்வி மற்றும் மருத்துவத்தை ஏழை, எளிய மக்களுக்குக் கொடுத்து நல்ல காரியம் செய்து வருகின்றனர். இந்துக்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் இந்து முன்னணி களத்தில் இறங்கும் என தெரிவித்தார்.



தொடர்ந்து பேசிய அவர்,உதயநிதி இன்று காலை ஒரு அறிக்கையை விட்டுள்ளார். அதில் எதிர்க்கட்சி மற்றும் ஆளுநரை ஓட விட்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.



முதல்வர் ஸ்டாலின் சட்டையைக் கிழித்து வந்தாரே அதைப் பத்தி பேசினாரா? சுபஸ்ரீ மரணம் நக்சல் வேலையாக இருக்குமோ? எனச் சந்தேகம் உள்ளது. காவல்துறை உரிய விசாரணை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...