கோவை வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலில் அரசின் அன்னதான திட்டம் - தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

துடியலூர் அடுத்த வடமதுரையில் உள்ள 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த விருந்தீஸ்வரர் கோவிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அடுத்துள்ள வடமதுரை பகுதியில் 1000 ஆண்டுகள் பழமையான விருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.



இந்த விருந்தீஸ்வரர் கோவிலில் வரும் பக்தர்களுக்கு தமிழக அரசால் அன்னதான திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.



இதனை தொடர்ந்து விருந்தீஸ்வரர் கோவிலில் இந்து அறநிலையத்துறை ஆணையர் பரஞ்சோதி, திமுக மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.



இந்த நிகழ்வில், உதவி ஆணையர் கருணாநிதி, செயல் அலுவலர் லோகநாதன், ஆய்வாளர் சரண்யா, மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், துணைச் செயலாளர் அசோக் ஆறுக்குட்டி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணி, ஊராட்சித் தலைவர் ரவி ஆகியோர் பங்கேற்றனர்.

அதேபோல் டியூகாஸ் துணைத்தலைவர்கள் செல்வராஜ், மோகன்ராஜ், தம்புராஜ், சண்முகம், கவுன்சிலர்கள் கலா சாந்தாராம், மாணிக்கம், சூர்யா வெள்ளியங்கிரி, சண்முகசுந்தரம், முன்னாள் தலைவர் அருள்குமார், மருதாசலம், அசோக், பார்த்திபன், ரங்கநாயகி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...