மாலை 3 மணிக்கு விழிப்புணர்வு அவசர கூட்டம் - கோவை மருந்து வணிகர்களுக்கு அழைப்பு

கோவை மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு துறை, சுகாதாரத்துறை இணைந்து இன்று (10.01.2023) மாலை 3 மணியளவில் சமரச சுத்த சன்மார்க்க சங்க கட்டிடத்தில் நடைபெறவுள்ள விழிப்புணர்வு அவசர கூட்டத்தில் அனைத்து மருந்து வணிகர்கள் பங்கேற்க அழைப்பு.


கோவை: கோவை மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு துறை, சுகாதாரத்துறை, மருந்து வணிகர் சங்கம் இணைந்து நடத்தும் அவசர கூட்டத்தில் அனைத்து மருந்து வணிகர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை மாவட்ட மருந்து வணிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கோவை மாவட்டத்தில் மருந்து இருப்பு பராமரித்தல், வலி நிவாரணி மாத்திரைகள், கருத்தடை மாத்திரைகள், இவ்வகையான மருந்துகள் விற்பனை செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து விளக்கப்பட உள்ளன.

இதற்கான விழிப்புணர்வு கூட்டம் இன்று (10.01.2023) மாலை 3 மணியளவில், சமரச சுத்த சன்மார்க்க சங்க கட்டிடத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வானது, கோவை மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு துறை மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்படுகிறது.

இந்த கூட்டத்தில், மருந்து கட்டுப்பாட்டு துறை துணை இயக்குனர், சுகாதாரத்துறை இணை இயக்குநர் மற்றும் அனைத்து மருந்து ஆய்வாளர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்க உள்ளனர்.

இந்த நிகழ்வில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்து வணிகர்களும் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...