மாலை 3 மணிக்கு விழிப்புணர்வு அவசர கூட்டம் - கோவை மருந்து வணிகர்களுக்கு அழைப்பு

கோவை மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு துறை, சுகாதாரத்துறை இணைந்து இன்று (10.01.2023) மாலை 3 மணியளவில் சமரச சுத்த சன்மார்க்க சங்க கட்டிடத்தில் நடைபெறவுள்ள விழிப்புணர்வு அவசர கூட்டத்தில் அனைத்து மருந்து வணிகர்கள் பங்கேற்க அழைப்பு.


கோவை: கோவை மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு துறை, சுகாதாரத்துறை, மருந்து வணிகர் சங்கம் இணைந்து நடத்தும் அவசர கூட்டத்தில் அனைத்து மருந்து வணிகர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை மாவட்ட மருந்து வணிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கோவை மாவட்டத்தில் மருந்து இருப்பு பராமரித்தல், வலி நிவாரணி மாத்திரைகள், கருத்தடை மாத்திரைகள், இவ்வகையான மருந்துகள் விற்பனை செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து விளக்கப்பட உள்ளன.

இதற்கான விழிப்புணர்வு கூட்டம் இன்று (10.01.2023) மாலை 3 மணியளவில், சமரச சுத்த சன்மார்க்க சங்க கட்டிடத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வானது, கோவை மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு துறை மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்படுகிறது.

இந்த கூட்டத்தில், மருந்து கட்டுப்பாட்டு துறை துணை இயக்குனர், சுகாதாரத்துறை இணை இயக்குநர் மற்றும் அனைத்து மருந்து ஆய்வாளர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்க உள்ளனர்.

இந்த நிகழ்வில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்து வணிகர்களும் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...