விவசாயத் தோட்டத்தில் உலா வரும் ஒற்றைக் காட்டுயானை - கோவையில் விவசாயிகள் கலக்கம்!

கோவை வாளையாறு எல்லையில் உலா வரும் ஒற்றைக் காட்டுயானை, மாவூத்தம்பதி கிராமத்தில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வாளையாறு எல்லையில் உள்ள மாவூத்தம்பதி ஊராட்சி முருகன்பதி கிராமத்தில், தர்மராஜ் என்ற விவசாயி தமது தோட்டத்தில் தென்னை, வாழை, சோலம் ஆகியவற்றை பயிரிட்டுள்ளார்.



இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அருகே உள்ள மலையை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து இறங்கும் ஒற்றை காட்டு யானை, தர்மராஜின் தோட்டத்தில் புகுந்து, அரை ஏக்கரில் பயிரிட்டிருந்த சோளப்பயிர்களை முற்றிலுமாக சேதப்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, அங்குள்ள சுமார் 3 வயதுடைய தென்னங்கன்றுகளை சேதப்படுத்தி குறுத்துகளையும் பிடிங்கியுள்ளது.

பேட்டரி மின்வேலிகள் அமைத்திருந்தாலும், இந்த ஒற்றை யானையானது, அருகே உள்ள மரங்களை தூக்கி வேலிகள் மீது வீசி உடைத்துவிட்டு உள்ளே செல்கிறது. வனப்பகுதிக்குள் விரட்ட முயல்பவர்களையும் , யானை தாக்க முயல்வதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.



மேலும், காட்டு யானைகள் ஏற்படுத்தும் சேதத்தால் ஏற்படும் நஷ்டத்தையும் தாண்டி, அதனை சீர்செய்யவும் கூடுதல் செலவு ஆவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

விளைநிலங்களுக்குள் காட்டுயானைகள் நுழைவதைத் தடுக்க வனத்துறை நிரந்தரத் தீர்வு காண வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...