உதகையில் ஜீரோ டிகிரி வெப்பம் - உறைபனியால் முடங்கிய இயல்பு வாழ்க்கை!

நீலகிரி மாவட்டம் உதகையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை வெப்பநிலை 0 டிகிரிக்கு சரிந்து, உறைபனி பொழிந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போனது.



நீலகிரி: மலைகளின் ராணி என்ற பெருமைக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் மேற்குத் தொடர்ச்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒன்று. குளிர்காலங்களில் இங்கு அதிகப்படியான குளிர் மற்றும் உறைபனிப் பொழிவு இருக்கும்.



தற்போது, குளிர்காலம் என்பதால், உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இன்று அதிகாலை கடும் உறை பனிப்பொழிவு காணப்பட்டது.

உதகையில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக காலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிரான சூழல் நிலவியது.



இந்த நிலையில், உதகை அருகே உள்ள தலைகுந்தா, அவலாஞ்சி, காந்தள் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை O டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், அரசு தாவரவியல் பூங்காவில் 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவானது.

இதனால், உதகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் இன்று காலை அதிகப்படியான உறைப் பனிப்பொழிவு காணப்பட்டது.



உதகை குதிரைப்பந்தய மைதானம், காந்தல், தலைகுந்தா, எச்.பி.எஃப் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கட்டடங்கள், பச்சை புல்வெளிகளில் உறை பனி படிந்து, வெள்ளை கம்பளம்போல் காட்சி அளித்தது.



அதுமட்டுமின்றி, அப்பகுதியில் நிறுத்தி வைக்கபட்டிருந்த வாகனங்களின் மீதும், விவசாய பயிர்களின் மீதும் உறைபனியின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

இந்த உறைபனியால் காலை 10 மணி வரை கடுமையான குளிர் நிலவியதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டதால் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...