உதகையில் ஹெத்தையம்மன் திருவிழா - பாரம்பரிய உடையணிந்து படுகர் இனமக்கள் கொண்டாட்டம்..!

உதகை அடுத்த பேரகணி பகுதியில் உள்ள ஹெத்தையம்மன் கோவில் திருவிழாவில், படுகர் இன மக்கள் பாரம்பரியமான வெண்மை நிற உடையணிந்து நடனமாடி உற்சாகமாக கொண்டாடினர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் பேரகணி பகுதியில் உள்ள ஹெத்தையம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

இந்த ஹெத்தையம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த வாரம் கோத்தகிரி அருகே உள்ள பேரகணியில் தொடங்கியது.



இந்நிலையில், முக்கிய நிகழ்வான ஜெகதளா ஹெத்தை திருவிழா இன்று நடைபெற்றது.



இந்த திருவிழாவில் ஜெகதளா மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் வசித்து வரும் படுகர் இன மக்கள் தங்களது பாரம்பரிய வெண்மை நிற ஆடைகளை அணிந்து வந்திருந்தனர்.



முன்னதாக ஹெத்தையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது.

இந்த நிகழ்வுக்காக 48 நாட்கள் விரதம் இருந்த படுகர் இன ஆண்கள் மற்றும் கோவில் பூசாரிகள் கலந்து கொண்டு ஹெத்தை அம்மனை ஊர்வலமாக அழைத்து சென்றனர்.



முக்கிய வீதிகளின் வழியாக வந்த ஹெத்தையம்மனை படுகர் இன சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கும்பிட்டு வழிபட்டனர்.



அப்போது ஹெத்தை அம்மனுடன் படுகர் இன ஆண்கள் கைகளில் செங்கோலை ஏந்தியபடி பக்தி பரவசத்தடன் வரிசையாக ஊர்வலமாக சென்றனர்.



படுகர் இன மக்கள் பாரம்பரிய உடையான வெண்மை நிற உடை அணிந்து வந்து கொண்டாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...