ஆளுநர் ஆர்.என்.ரவியின் தமிழ்நாடு - தமிழகம் கருத்து சர்ச்சைக்குள்ளான நிலையில், கோவை மாநகர் பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் சார்பில் 'தமிழ்நாடு வாழ்க' என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
கோவை: சென்னை கிண்டியில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்கலாம் என்று கூறியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.
இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினர் ஆளுநர் அவ்வாறு கூறியது ஏற்கத்தக்கதல்ல என்றும் 'தமிழ்நாடு' என்று தான் கூற வேண்டும் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே பாஜகவை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் ஆளுநர் பேசியது பிரிவினை வாதத்தை தூண்டுவதற்காக இல்லை எனவும் அதனை அரசியலாக்க வேண்டாம் எனவும் கூறி வருகின்றனர். அதேபோல் சமூக வலைத்தளங்களில் பலரும் தமிழகம் - தமிழ்நாடு சர்ச்சை குறித்து அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை லங்கா கார்னர் பகுதியில் கோவை மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் “தமிழ்நாடு வாழ்க” என போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பாரதியார் போல வேடம் அணிந்த புகைப்படமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினர் ஆளுநர் அவ்வாறு கூறியது ஏற்கத்தக்கதல்ல என்றும் 'தமிழ்நாடு' என்று தான் கூற வேண்டும் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே பாஜகவை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் ஆளுநர் பேசியது பிரிவினை வாதத்தை தூண்டுவதற்காக இல்லை எனவும் அதனை அரசியலாக்க வேண்டாம் எனவும் கூறி வருகின்றனர். அதேபோல் சமூக வலைத்தளங்களில் பலரும் தமிழகம் - தமிழ்நாடு சர்ச்சை குறித்து அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை லங்கா கார்னர் பகுதியில் கோவை மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் “தமிழ்நாடு வாழ்க” என போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பாரதியார் போல வேடம் அணிந்த புகைப்படமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.