கோவை நஞ்சுண்டாபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் 2.5 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர்.
கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் கே ஆர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரன். இவரது மனைவி சத்யகலா (46). இவர் ராமநாதபுரம் பகுதியில் உள்ள மருந்தகத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று அவர் வழக்கம்போல் பணிக்குச் சென்றுவிட்டு தனது மகளுடன் இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.
அப்போது நஞ்சுண்டாபுரம் கருப்பராயன் கோவில் அருகே வந்தபோது, எதிரே மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சத்யகலா அணிந்திருந்த 2.5 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சத்தியகலாவிற்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
சம்பவம்குறித்து அவர் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அவர் வழக்கம்போல் பணிக்குச் சென்றுவிட்டு தனது மகளுடன் இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.
அப்போது நஞ்சுண்டாபுரம் கருப்பராயன் கோவில் அருகே வந்தபோது, எதிரே மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சத்யகலா அணிந்திருந்த 2.5 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சத்தியகலாவிற்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
சம்பவம்குறித்து அவர் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.