கோவை கிணத்துக்கடவு அருகே சுடிதார் அணிந்து வீடு வீடாக சென்று செருப்பு திருடும் மர்ம ஆசாமி - வைரல் வீடியோ..!

கிணத்துக்கடவு பேருந்து நிலையம் எதிரே உள்ள குடியிருப்புகளில் இரவு நேரத்தில் சுடிதார் அணிந்து சென்று செருப்பு திருடும் மர்ம ஆசாமியின் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பேருந்து நிலையம் எதிரே உள்ள குடியிருப்பு பகுதிகளில் வீட்டு வாசல்களில் விடப்படும் செருப்புகள் அண்மை காலமாக காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செருப்புகள் காணாமல் போனதை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேரமா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் கடந்த 2ம் தேதி இரவு பதிவான காட்சிகள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.



அந்த சிசிடிவி காட்சியில் நள்ளிரவு நேரத்தில் சுடிதார் அணிந்து வந்த மர்ம ஆசாமி ஒருவர் வீட்டு வாசலில் உள்ள செருப்புகளை எடுத்து செல்வதும், கண்காணிப்பு கேமராவை கண்டதும் முகத்தை மறைத்துக் கொண்டு செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.



இதுகுறித்து கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு, மர்ம ஆசாமி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...