கோவை கிணத்துக்கடவு அருகே சுடிதார் அணிந்து வீடு வீடாக சென்று செருப்பு திருடும் மர்ம ஆசாமி - வைரல் வீடியோ..!

கிணத்துக்கடவு பேருந்து நிலையம் எதிரே உள்ள குடியிருப்புகளில் இரவு நேரத்தில் சுடிதார் அணிந்து சென்று செருப்பு திருடும் மர்ம ஆசாமியின் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பேருந்து நிலையம் எதிரே உள்ள குடியிருப்பு பகுதிகளில் வீட்டு வாசல்களில் விடப்படும் செருப்புகள் அண்மை காலமாக காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செருப்புகள் காணாமல் போனதை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேரமா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் கடந்த 2ம் தேதி இரவு பதிவான காட்சிகள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.



அந்த சிசிடிவி காட்சியில் நள்ளிரவு நேரத்தில் சுடிதார் அணிந்து வந்த மர்ம ஆசாமி ஒருவர் வீட்டு வாசலில் உள்ள செருப்புகளை எடுத்து செல்வதும், கண்காணிப்பு கேமராவை கண்டதும் முகத்தை மறைத்துக் கொண்டு செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.



இதுகுறித்து கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு, மர்ம ஆசாமி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...