கோவை மாவட்ட அளவிலான கலைத்திருவிழா - இடிகரை அரசுப் பள்ளி முதலிடம்!

கோவை மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் இடிகரை அரசுப் பள்ளி அதிக பரிசுகளைப் பெற்று கோவை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.


கோவை: பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவ மாணவிகளின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இதில் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் நடந்த கலைத் திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. கலைத்திருவிழாவில், கோவை இடிகரை அரசு பள்ளியைச் சேர்ந்த 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவ மாணவிகள் கணியன் கூத்து, தேவராட்டம், மனிநேயப்பாடல் பிரிவுகளில் முதலிடத்தைப் பெற்றனர்.

அதே போல் 6வது முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் வீதி நாடகம், கும்மி நடனம், மனிதநேயபாடல், மனதில் பட்ட இயற்கை காட்சிகளை வரைதல் பிரிவுகளில் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

மேலும் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவ மாணவிகள் உருமி இசைக்கருவி, இணைய கருத்துருவாக்கம், பானை ஓவியம் உள்ளிட்ட பிரிவுகளில் மூன்றாம் இடத்தைப் பெற்று கோவை மாவட்ட அரசு பள்ளிகளில் அதிக அளவு பரிசுகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தது.



இதைத் தொடர்ந்து கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் சித்ரா தலைமையில் இன்று பள்ளியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தியாகராஜன் பங்கேற்று சிறப்பு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.



மேலும் சென்னை மொபைல் சார்பில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர், ஆசிரியர்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...