திருப்பூரில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்க நடவடிக்கை! - புதிய காவல் ஆணையர் உறுதி

திருப்பூர் மாநகரின் புதிய காவல் ஆணையராக பிரவீன்குமார் அபினவு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கடந்த 2008 ஆம் ஆண்டு உதயமானதற்கு பின்னர் 2013 ஆம் ஆண்டு மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது.



இதில் திருப்பூர் மாநகர காவல் துறையின் 11 வது காவல் ஆணையராக சேலம் சரகத்தில் பணியாற்றி வந்த டிஐஜி பிரவீன் குமார் அபினவு இன்று திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன்குமார் அபினவு, திருப்பூர் மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் வரும் பொதுமக்களின் குறைகளை தீர்க்க துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கப்படும் என்றும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

மேலும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளை தடுப்பதற்கு முற்றிலுமாக பணியாற்றுவேன் என்றும் கூறினார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...