கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா - பக்தர்கள் தரிசனம்

கோவையில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.



கோவை: கோவையின் புகழ்பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மார்கழி திருவாதிரை திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு மார்கழி திருவாதிரை திருவிழா கடந்த 28ஆம் தேதி காப்பு கட்டலுடன் துவங்கியது.

பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் முதல் 9 நாட்களும் காலையும் மாலையும் திருவெம்பாவை உற்சவம், மாணிக்கவாசகர் திருவீதி உலா நடந்தது. ஒன்பதாவது நாளான நேற்று இரவு கிளி வாகன சேவை, அன்னூஞ்சல் நடத்தப்பட்டது.



இந்நிலையில் இன்று அதிகாலை 3:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மார்கழி பூஜை செய்யப்பட்டது, தொடர்ந்து 4:15 மணிக்கு நடராஜப் பெருமானுக்கு 30 வகையான மங்கள திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 8 மணிக்கு ஆருத்ரா தரிசன காட்சி நடைபெற்றது.



அதனைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதனை ஒட்டி ஏராளமான பக்தர்கள் பேரூரில் குவிந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் குவிந்துள்ளதால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...