கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா - பக்தர்கள் தரிசனம்

கோவையில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.



கோவை: கோவையின் புகழ்பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மார்கழி திருவாதிரை திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு மார்கழி திருவாதிரை திருவிழா கடந்த 28ஆம் தேதி காப்பு கட்டலுடன் துவங்கியது.

பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் முதல் 9 நாட்களும் காலையும் மாலையும் திருவெம்பாவை உற்சவம், மாணிக்கவாசகர் திருவீதி உலா நடந்தது. ஒன்பதாவது நாளான நேற்று இரவு கிளி வாகன சேவை, அன்னூஞ்சல் நடத்தப்பட்டது.



இந்நிலையில் இன்று அதிகாலை 3:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மார்கழி பூஜை செய்யப்பட்டது, தொடர்ந்து 4:15 மணிக்கு நடராஜப் பெருமானுக்கு 30 வகையான மங்கள திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 8 மணிக்கு ஆருத்ரா தரிசன காட்சி நடைபெற்றது.



அதனைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதனை ஒட்டி ஏராளமான பக்தர்கள் பேரூரில் குவிந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் குவிந்துள்ளதால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...