புதிய தொழில்கள் தொடங்குவதற்கு உகந்த இடம் கோவை நகரம்! - ஆட்சியர் சமீரன் புகழாரம்

கோவையில், எளிதாக வணிகம் செய்வது தொடர்பான ஒருமுனை தீர்வு மையம் இணையதள பயன்பாடு தொடர்பான பயிற்சி பட்டறை கூட்டம், மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.


கோவை: கோவை ரெசிடன்சி ஹோட்டலில் FaMe TN. Guidance Tamilnadu சார்பில் எளிதாக வணிகம் செய்வது தொடர்பான ஒருமுனை தீர்வு மையம்(Single window Portal) இணையதள பயன்பாடு தொடர்பான பயிற்சி பட்டறை கூட்டம், மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வழிகாட்டி தமிழ்நாடு செயல் இயக்குநர் ஆஷா அஜித், FaMeTN பொதுமேலாளர் சக்திவேல் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் திருமுருகன், மற்றும் தொழில்முனைவோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர் சமீரன், கோவை மாவட்டத்தில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, புதிய தொழில்களை ஊக்குவிக்கும் வகையிலும் தொழில் முனைவோர்களின் புதிய தொழில்களுக்கான அரசு அனுமதிகளை எளிமையாக்கும் வகையிலும் தொழில் துவங்குவதற்கு பல்வேறு அரசு அமைப்புகளிடம் அனுமதி பெறுவதை ஒற்றைச் சாளர முறைக்கு மாற்றப்பட்டு பல்வேறு துறைகளின் அனுமதிகள் இணையத்தின் மூலம் ஒரே வழியில் வழங்கப்பட்டு வருகின்றது.



கோவையில் ஒற்றை சாளரா முறையானது, அனுமதியினை எளிதாக வழங்கவும், வெளிப்படை தன்மையுடன் இருப்பதற்காகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம், ஒரு சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரமாகவும், புதிய தொழில்கள் தொடங்க உகந்த இடமாகவும் உள்ளது. இங்கு ஏற்கனவே செயல்பட்டு வரும் பல்வேறு தொழில்களுக்கும், புதிய தொழில்கள் தொடங்குவதற்கும் அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது.

ஒருமுனை தீர்வு மையம் இணையதள தெளிவுபடுத்துவதற்காக பயன்பாடு தொடர்பான இக்கூட்டம் நடத்தப்படுகிறது. சந்தேகங்களை தொழில்நுட்ப பிரச்சனைகள் வெளிப்படத்தன்மை, காலகட்டத்திற்கு ஏற்றவாறு சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட தங்களது கருத்தை தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.

இதில் ஒற்றை சாளர இணைய முகப்பு தொடர்பான செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஒரு முனை தீர்வு மையம் இணையதள பயன்பாடு தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...