தமிழை மத்திய தொடர்பு மொழியாக அறிவிக்க கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - மதிமுக அவைத்தலைவர் துரைசாமி

தமிழை மத்திய தொடர்பு மொழியாக்கும் தீர்மானத்தை பாஜக அரசு நிராகரிக்கும் பட்சத்தில், அதன் உண்மை தன்மையை அறிந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.


திருப்பூர்: திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் உள்ள மதிமுக தொழிற்சங்க அலுவலகத்தில் மதிமுகவின் அவை தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சு.துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் இந்தியை திணிக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வரும் 9ஆம் தேதி கூட உள்ள தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழை மத்திய தொடர்பு மொழியாக அறிவிக்க கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அதனை மத்திய அரசு நிராகரிக்கும் பட்சத்தில் மத்திய அரசின் உண்மை தன்மையை அறிந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்.

இதேபோல் இந்தி பேசாத ஒவ்வொரு மாநிலங்களிலும் மாநில மொழியை தொடர்பு மொழியாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்ற முன்வர வேண்டும். இந்தி மொழி பேசும் மாநிலங்கள் எல்லாம் ஆங்கில மொழியை கட்டாய மொழியாக்கி கொண்டு தமிழகத்தில் பாஜக இந்தியை திணிக்க முயற்சித்து வருகிறது.

ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருப்பதன் மூலம் தமிழர்கள் வெளிநாடுகளில் தங்கள் ஆளுமையை செலுத்தி வருகின்றனர். மதிமுகவின் வாரிசு அரசியல் குறித்த கேள்விக்கு மாற்றங்கள் தவிர்க்க முடியாதது. மதிமுகவின் எதிர்காலம் அதன் நடவடிக்கைகளை பொறுத்து அமையும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...