தமிழை மத்திய தொடர்பு மொழியாக அறிவிக்க கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - மதிமுக அவைத்தலைவர் துரைசாமி

தமிழை மத்திய தொடர்பு மொழியாக்கும் தீர்மானத்தை பாஜக அரசு நிராகரிக்கும் பட்சத்தில், அதன் உண்மை தன்மையை அறிந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.


திருப்பூர்: திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் உள்ள மதிமுக தொழிற்சங்க அலுவலகத்தில் மதிமுகவின் அவை தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சு.துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் இந்தியை திணிக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வரும் 9ஆம் தேதி கூட உள்ள தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழை மத்திய தொடர்பு மொழியாக அறிவிக்க கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அதனை மத்திய அரசு நிராகரிக்கும் பட்சத்தில் மத்திய அரசின் உண்மை தன்மையை அறிந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்.

இதேபோல் இந்தி பேசாத ஒவ்வொரு மாநிலங்களிலும் மாநில மொழியை தொடர்பு மொழியாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்ற முன்வர வேண்டும். இந்தி மொழி பேசும் மாநிலங்கள் எல்லாம் ஆங்கில மொழியை கட்டாய மொழியாக்கி கொண்டு தமிழகத்தில் பாஜக இந்தியை திணிக்க முயற்சித்து வருகிறது.

ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருப்பதன் மூலம் தமிழர்கள் வெளிநாடுகளில் தங்கள் ஆளுமையை செலுத்தி வருகின்றனர். மதிமுகவின் வாரிசு அரசியல் குறித்த கேள்விக்கு மாற்றங்கள் தவிர்க்க முடியாதது. மதிமுகவின் எதிர்காலம் அதன் நடவடிக்கைகளை பொறுத்து அமையும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...

கோவையில் SP வேலுமணியின் ஐந்தாவது முறை வெற்றிக்கு அண்ணாமலை வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் உள்ள தனது இல்லத்தில் SP வேலுமணியை சந்தித்து, அவரது ஐந்த...

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் 63-வது வார்டு இராமநாதபுரம் மற்றும் ஒலாம்பஸ் பகுதிகளில் வீடு வீடா...

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தி...

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...