கோவை சூலூரில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா சாக்லேட் விற்பனை - ஒடிசா இளைஞர் கைது..!

சூலூர் அடுத்த கண்ணம்பாளையத்தில் கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒடிசா மாநில இளைஞரை கைது செய்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், 6.5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் மதுவிலக்கு அமலாக்க பிரிவினரும் கஞ்சா மற்றும் குட்கா கடத்தல் தொடர்பாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லெட்டுகளை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் கண்ணம்பாளையம் பகுதியில் தங்கியிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனோஜ் குமார் சிங் (32) என்பவரது அறையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், அங்கு அதிகளவில் கஞ்சா சாக்லேட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட ஒடிசா மாநில இளைஞர் மனோஜ் குமார் சிங்கிடம் இருந்து 6.5 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...