ஈஷாவிற்கு சென்ற பெண் உயிரிழந்த வழக்கில் முதல்வர் தயங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கோவையில் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன்

சுபஸ்ரீ வழக்கில் தமிழக காவல்துறை மென்மையான போக்கை கடைபிடிக்க கூடாது என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வழக்கில் தயங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முத்தரசன் வலியுறுத்தல்.



கோவை: கோவையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தில், அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சி முடிந்த நிலையில் மாயமான சுபஸ்ரீ என்ற பெண், மர்மமான முறையில் உயிரிழந்து விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், மத்திய அரசுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால், சுபஸ்ரீயின் மரணம் மறைக்கப்படுகிறது என பொதுமக்களுக்கு ஐயம் உள்ளது. ஜக்கி வாசுதேவ் செல்வாக்குடன் இருக்கலாம். ஆனால் சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

காவல்துறையின் அமைதி புதிராக உள்ளது. மாநில அரசு நீதிபதியை தேர்வு செய்து, முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் தான் படுகொலைகளை நிறுத்த முடியும். இச்சம்பவம் தொடர்பாக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில் விசாரணை நடத்த வலியுறுத்தி வரும் 6ஆம் தேதி கோவை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ஈஷா பலரின் பினாமியாக செயல்படுகிறது. ஈஷா விவகாரத்தில் மற்ற அரசியல் கட்சிகளை சந்தித்து பேசி அனைத்து முன் முயற்சிகளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும்.

ஈஷா விவகாரத்தில் தமிழக காவல்துறை, மாவட்ட காவல்துறை மென்மையான போக்கை கையாளாமல் இருக்க வேண்டும். பெண்கள் மீது விரும்பத்தகாத வேலையில் யார் ஈடுபட்டாலும் தவறுதான். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக கூட்டணி கட்சிகள் அடிமையாக இருப்பதாக கூறிய அதிமுக முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய அவர், மோடியின் காலில் விழுந்தவர் தான் எஸ்.பி. வேலுமணி. அவரை போல அடிமை யாரும் இல்லை. அவருக்கு திமுக கூட்டணி கட்சிகளை பற்றி பேச தகுதியில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...