ஈஷாவிற்கு சென்ற பெண் உயிரிழந்த வழக்கில் முதல்வர் தயங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கோவையில் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன்

சுபஸ்ரீ வழக்கில் தமிழக காவல்துறை மென்மையான போக்கை கடைபிடிக்க கூடாது என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வழக்கில் தயங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முத்தரசன் வலியுறுத்தல்.



கோவை: கோவையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தில், அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சி முடிந்த நிலையில் மாயமான சுபஸ்ரீ என்ற பெண், மர்மமான முறையில் உயிரிழந்து விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், மத்திய அரசுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால், சுபஸ்ரீயின் மரணம் மறைக்கப்படுகிறது என பொதுமக்களுக்கு ஐயம் உள்ளது. ஜக்கி வாசுதேவ் செல்வாக்குடன் இருக்கலாம். ஆனால் சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

காவல்துறையின் அமைதி புதிராக உள்ளது. மாநில அரசு நீதிபதியை தேர்வு செய்து, முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் தான் படுகொலைகளை நிறுத்த முடியும். இச்சம்பவம் தொடர்பாக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில் விசாரணை நடத்த வலியுறுத்தி வரும் 6ஆம் தேதி கோவை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ஈஷா பலரின் பினாமியாக செயல்படுகிறது. ஈஷா விவகாரத்தில் மற்ற அரசியல் கட்சிகளை சந்தித்து பேசி அனைத்து முன் முயற்சிகளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும்.

ஈஷா விவகாரத்தில் தமிழக காவல்துறை, மாவட்ட காவல்துறை மென்மையான போக்கை கையாளாமல் இருக்க வேண்டும். பெண்கள் மீது விரும்பத்தகாத வேலையில் யார் ஈடுபட்டாலும் தவறுதான். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக கூட்டணி கட்சிகள் அடிமையாக இருப்பதாக கூறிய அதிமுக முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய அவர், மோடியின் காலில் விழுந்தவர் தான் எஸ்.பி. வேலுமணி. அவரை போல அடிமை யாரும் இல்லை. அவருக்கு திமுக கூட்டணி கட்சிகளை பற்றி பேச தகுதியில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...