போதையில்லா மாவட்டமாக மாற்றப்படும்..! - நீலகிரி புதிய எஸ்பி பிரபாகர் உறுதி

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பிரபாகர் பொறுப்பேற்றுக் கொண்டார்.



நீலகிரி: நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆசிஸ் ராவத், சமீபத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றபட்டார். அவருக்கு பதிலாக சென்னை மெட்ரோ தலைமை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பிரபாகர் நியமிக்கபட்டார்.



இதையடுத்து இன்று ஊட்டி வந்த பிரபாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவில் இருந்து மாவோயிஸ்ட் அமைப்பினர், நீலகிரி மாவட்டத்திற்குள் வராமல் தடுக்கப்படும் என்றும், ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், போதையில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.



இவர் 2005 -ஆம் ஆண்டு குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி- ஆக ஆக பணியில் சேர்ந்தார் பிரபாகர். பின்னர் வால்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தமிழக அதிரடி படையில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அவர், இறுதியாக சென்னை மெட்ரோ தலைமைபாதுகாப்பு அதிகாரியாக இருந்தார்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...