கர்நாடக அரசு பேருந்தில் உதகைக்கு கடத்தி வரப்பட்ட 50 பண்டல் குட்கா பறிமுதல்

உதகை மத்திய பேருந்து நிலையத்தில் மேற்கொண்ட சோதனையில், கர்நாடக அரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட 50 பண்டல் குட்கா பொருட்களை, இன்ஸ்பெக்டர் பிலிப் தலைமையிலான போலீசார் கைப்பற்றி, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஆனது வடக்கே கர்நாடகா மாநிலமும், மேற்கே கேரளா மாநிலமும் எல்லைகளாக கொண்டுள்ளது. இதனால், சட்டவிரோதமாக ரேசன் அரிசி, மரம் மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தல் சம்பவங்களை தடுக்க மாநில எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சமீப காலமாக கர்நாடக மாநிலத்திலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வருவது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, உதகை மத்திய பேருந்து நிலையத்திற்கு, கர்நாடகா மாநிலத்திலிருந்து வரும் KSRTC அரசு பேருந்தில், போதை பொருட்கள் கடத்தி வருவதாக உதகை நகர் மேற்கு காவல் நிலைய G1 காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் பிலிப் தலைமையிலான போலீசார் பேருந்தில், கர்நாடக அரசு பேருந்தில் சோதனை செய்த போது, 50 பண்டல் போதை வஸ்து (Hans) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அவற்றை சத்தியமங்கலம் புஞ்சை புளியம்பட்டியை காந்தராஜ் (33) என்ற நபர் எடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதனையடுத்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...