கர்நாடக அரசு பேருந்தில் உதகைக்கு கடத்தி வரப்பட்ட 50 பண்டல் குட்கா பறிமுதல்

உதகை மத்திய பேருந்து நிலையத்தில் மேற்கொண்ட சோதனையில், கர்நாடக அரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட 50 பண்டல் குட்கா பொருட்களை, இன்ஸ்பெக்டர் பிலிப் தலைமையிலான போலீசார் கைப்பற்றி, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஆனது வடக்கே கர்நாடகா மாநிலமும், மேற்கே கேரளா மாநிலமும் எல்லைகளாக கொண்டுள்ளது. இதனால், சட்டவிரோதமாக ரேசன் அரிசி, மரம் மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தல் சம்பவங்களை தடுக்க மாநில எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சமீப காலமாக கர்நாடக மாநிலத்திலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வருவது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, உதகை மத்திய பேருந்து நிலையத்திற்கு, கர்நாடகா மாநிலத்திலிருந்து வரும் KSRTC அரசு பேருந்தில், போதை பொருட்கள் கடத்தி வருவதாக உதகை நகர் மேற்கு காவல் நிலைய G1 காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் பிலிப் தலைமையிலான போலீசார் பேருந்தில், கர்நாடக அரசு பேருந்தில் சோதனை செய்த போது, 50 பண்டல் போதை வஸ்து (Hans) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அவற்றை சத்தியமங்கலம் புஞ்சை புளியம்பட்டியை காந்தராஜ் (33) என்ற நபர் எடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதனையடுத்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...