ஈஷா யோகா மையத்தில் பயிற்சி பெற்றுத் திரும்பிய போது காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கு சந்தேக மரணமாக மாற்றப்பட்டது

முன்னதாக, காணாமல் போனதாக பதியப்பட்ட வழக்கு தற்போது சந்தேகம் மரணம் என்ற பிரிவின் கீழ் மாற்றப்பட்டுள்ளது. அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, இன்று பெரியாரிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு வந்து வெளியே சென்று மாயமான திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண் செம்மேடு பகுதியில் தோட்டத்தில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

முன்னதாக, காணாமல் போனதாக பதியப்பட்ட வழக்கு தற்போது சந்தேகம் மரணம் மரணமாக (IPC 174) பிரிவின் கீழ் மாற்றப்பட்டது. அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, இன்று பெரியாரிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பூரை சேர்ந்த சுபஶ்ரீ கடந்த 11 ஆம் தேதி கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு வந்துள்ளார். பின்னர், கடந்த 18 ஆம் தேதி பயிற்சி நிறைவடைதற்கு முன்னதாக அவர் ஈஷா மையத்தில் இருந்து வெளியே வந்து மாயமானார்.

மேலும் சுபஸ்ரீ ஈஷா யோகா மையத்தில் இருந்து அவசரமாக வெளியே வந்து சாலையில் ஓடுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மனைவி காணாமல் போனது குறித்து அவரது கணவர் பழனிக்குமார் ஆலாந்துறை போலீசில் சுபஶ்ரீ மாயமானதாக புகார் அளித்தார்.

ஆலாந்துறை போலீசார் பெண் மாயம் (women missing )என வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று சுபஶ்ரீ செம்மேடு பகுதியில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து பெண் மாயம் என பதியப்பட்ட வழக்கு சந்தேக மரணமாக மாற்றப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...