ஈஷா யோகா மையத்தில் பயிற்சி பெற்றுத் திரும்பிய போது காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கு சந்தேக மரணமாக மாற்றப்பட்டது

முன்னதாக, காணாமல் போனதாக பதியப்பட்ட வழக்கு தற்போது சந்தேகம் மரணம் என்ற பிரிவின் கீழ் மாற்றப்பட்டுள்ளது. அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, இன்று பெரியாரிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு வந்து வெளியே சென்று மாயமான திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண் செம்மேடு பகுதியில் தோட்டத்தில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

முன்னதாக, காணாமல் போனதாக பதியப்பட்ட வழக்கு தற்போது சந்தேகம் மரணம் மரணமாக (IPC 174) பிரிவின் கீழ் மாற்றப்பட்டது. அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, இன்று பெரியாரிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பூரை சேர்ந்த சுபஶ்ரீ கடந்த 11 ஆம் தேதி கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு வந்துள்ளார். பின்னர், கடந்த 18 ஆம் தேதி பயிற்சி நிறைவடைதற்கு முன்னதாக அவர் ஈஷா மையத்தில் இருந்து வெளியே வந்து மாயமானார்.

மேலும் சுபஸ்ரீ ஈஷா யோகா மையத்தில் இருந்து அவசரமாக வெளியே வந்து சாலையில் ஓடுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மனைவி காணாமல் போனது குறித்து அவரது கணவர் பழனிக்குமார் ஆலாந்துறை போலீசில் சுபஶ்ரீ மாயமானதாக புகார் அளித்தார்.

ஆலாந்துறை போலீசார் பெண் மாயம் (women missing )என வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று சுபஶ்ரீ செம்மேடு பகுதியில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து பெண் மாயம் என பதியப்பட்ட வழக்கு சந்தேக மரணமாக மாற்றப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...