ஈஷா யோகா மையத்தில் பயிற்சி பெற்றுத் திரும்பிய போது காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கு சந்தேக மரணமாக மாற்றப்பட்டது

முன்னதாக, காணாமல் போனதாக பதியப்பட்ட வழக்கு தற்போது சந்தேகம் மரணம் என்ற பிரிவின் கீழ் மாற்றப்பட்டுள்ளது. அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, இன்று பெரியாரிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு வந்து வெளியே சென்று மாயமான திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண் செம்மேடு பகுதியில் தோட்டத்தில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

முன்னதாக, காணாமல் போனதாக பதியப்பட்ட வழக்கு தற்போது சந்தேகம் மரணம் மரணமாக (IPC 174) பிரிவின் கீழ் மாற்றப்பட்டது. அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, இன்று பெரியாரிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பூரை சேர்ந்த சுபஶ்ரீ கடந்த 11 ஆம் தேதி கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு வந்துள்ளார். பின்னர், கடந்த 18 ஆம் தேதி பயிற்சி நிறைவடைதற்கு முன்னதாக அவர் ஈஷா மையத்தில் இருந்து வெளியே வந்து மாயமானார்.

மேலும் சுபஸ்ரீ ஈஷா யோகா மையத்தில் இருந்து அவசரமாக வெளியே வந்து சாலையில் ஓடுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மனைவி காணாமல் போனது குறித்து அவரது கணவர் பழனிக்குமார் ஆலாந்துறை போலீசில் சுபஶ்ரீ மாயமானதாக புகார் அளித்தார்.

ஆலாந்துறை போலீசார் பெண் மாயம் (women missing )என வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று சுபஶ்ரீ செம்மேடு பகுதியில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து பெண் மாயம் என பதியப்பட்ட வழக்கு சந்தேக மரணமாக மாற்றப்பட்டுள்ளது.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...