ஈஷா யோகா மையத்தில் பயிற்சி பெற்றுத் திரும்பிய போது காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கு சந்தேக மரணமாக மாற்றப்பட்டது

முன்னதாக, காணாமல் போனதாக பதியப்பட்ட வழக்கு தற்போது சந்தேகம் மரணம் என்ற பிரிவின் கீழ் மாற்றப்பட்டுள்ளது. அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, இன்று பெரியாரிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு வந்து வெளியே சென்று மாயமான திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண் செம்மேடு பகுதியில் தோட்டத்தில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

முன்னதாக, காணாமல் போனதாக பதியப்பட்ட வழக்கு தற்போது சந்தேகம் மரணம் மரணமாக (IPC 174) பிரிவின் கீழ் மாற்றப்பட்டது. அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, இன்று பெரியாரிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பூரை சேர்ந்த சுபஶ்ரீ கடந்த 11 ஆம் தேதி கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு வந்துள்ளார். பின்னர், கடந்த 18 ஆம் தேதி பயிற்சி நிறைவடைதற்கு முன்னதாக அவர் ஈஷா மையத்தில் இருந்து வெளியே வந்து மாயமானார்.

மேலும் சுபஸ்ரீ ஈஷா யோகா மையத்தில் இருந்து அவசரமாக வெளியே வந்து சாலையில் ஓடுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மனைவி காணாமல் போனது குறித்து அவரது கணவர் பழனிக்குமார் ஆலாந்துறை போலீசில் சுபஶ்ரீ மாயமானதாக புகார் அளித்தார்.

ஆலாந்துறை போலீசார் பெண் மாயம் (women missing )என வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று சுபஶ்ரீ செம்மேடு பகுதியில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து பெண் மாயம் என பதியப்பட்ட வழக்கு சந்தேக மரணமாக மாற்றப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...